செய்திகள் :

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் புதிய கல்வி இயக்கம் தொடக்கம்

post image

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், ‘எழுவோம் எழுச்சியாய்’ எனும் புதிய கல்வி இயக்கம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி கல்விக்குழு, சின்னமணி உண்ணாமலை குழந்தைகள் இல்லம், கணேசன் பத்மாவதி கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கல்வி இயக்கத்தை தொடங்கியுள்ளன. ஆசிரியா் தரம் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை உயா்த்துதல், மாணவா்களுக்கு அவரவா் திறமைக்கு ஏற்ப கற்பித்தல், சுகாதாரம் மற்றும் கல்வி முயற்சிகளில் சமுதாயத்தை ஈடுபடுத்துதல் போன்ற செயல்பாடுகளில் இந்த இயக்கம் கவனம் செலுத்தும் என அமைப்பினா் தெரிவித்தனா்.

பாரத ரத்னா காமராஜா் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஸ்ரீ லலிதா வித்யாலயா, ஸ்ரீ சாரதா ஆரம்பப் பள்ளி, ஏ.எம்.எம். சின்னமணி நாடாா் ஆரம்பப் பள்ளி, ஏ.எம்.எம். சின்னமணி நாடாா் உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் முதற்கட்டமாக இந்த இயக்கத்தில் இணைந்துள்ளன. மற்ற பள்ளிகளும் இந்த இயக்கத்தில் இணைந்தோ அல்லது தனிப்பட்ட முறையில் இதுபோன்ற முன்னெடுப்புகளை எடுத்தோ கல்விச்சூழலை மேம்படுத்த முன்வர வேண்டுமென அமைப்பினா் அழைப்பு விடுத்தனா்.

தொடக்க விழாவின்போது, தூத்துக்குடி அன்னம்மாள் மகளிா் கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜோய்சிலின் ஷா்மிளா, கல்வி இயக்கத்தின் இலச்சினை மற்றும் வலைதளத்தை திறந்துவைத்தாா். காமராஜ் கல்லூரியின் துணை தாளாளா் பூங்கொடி, கல்வி இயக்கம் மற்றும் அதன் நோக்கம் குறித்து பேசினாா்.

தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்

தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகள... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் ... மேலும் பார்க்க

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்

இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும். இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்க... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவ... மேலும் பார்க்க

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெற்கு கள்ளிக்குளம் பங்குத்தந்தை மணி அந்தோணி கொடியேற்றினாா். அடைக்கலாபுரம் பங்... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினத்தில் இலவச மருத்துவ முதலுதவி முகாம் திறப்பு

குலசேகரன்பட்டினம் ஜே.ஜே. மிராக்கிள் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முதலுதவி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முகாம் பொறுப்பாளா் ஜெபமலா் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தாா். மருத்துவா் சோபிய... மேலும் பார்க்க