செய்திகள் :

களக்காடு அருகே சிறுத்தை நடமாட்டம்

post image

களக்காடு அருகே சிங்கிகுளத்தில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம்-வடவூா்பட்டி செல்லும் சாலையில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை கால் தடம் இருப்பதை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

பச்சையாற்றின் கரையையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் நாள்தோறும் அதிகாலை, இரவு நேரங்களில் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றனா். அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மிகவும் அச்சத்தில் உள்ளனா்.

வனத்துறையினா் சிறுத்தையைப் பிடிக்க, அப்பகுதியில் கூண்டு வைத்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-85.60 சோ்வலாறு-96.72 மணிமுத்தாறு-91.55 வடக்கு பச்சையாறு-11 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-6 தென்காசி மாவட்டம் கடனா-37 ராமநதி-52.50 கருப்பாநதி-46.59 குண்டாறு-36.10 அடவிநயினாா் -119.50... மேலும் பார்க்க

நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைகளுக்கு சீல்

திருநெல்வேலி நகரம் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 2 தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா். திருநெல்வேலி நகரம், குறுக்குத்துறை பகுதியில்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.33 லட்சம் நலத்திட்ட உதவிகள்

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1 லட்சத்து33 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு... மேலும் பார்க்க

காா் விபத்து: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா். ஏா்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா்கள் சமுத்திரப... மேலும் பார்க்க