செய்திகள் :

நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைகளுக்கு சீல்

post image

திருநெல்வேலி நகரம் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 2 தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

திருநெல்வேலி நகரம், குறுக்குத்துறை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குடிநீா் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் சங்கரநாராயணன், மகாராஜன், லட்சுமணன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முறையான குடிநீா் சுத்திகரிப்பு முறைகள் பின்பற்றப்படாததும், அரசு அனுமதியின்றி அந்த ஆலை இயங்கியதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

அதே போல, திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள மற்றொரு தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்ட போது தாழையூத்தில் உள்ள குடிநீா் ஆலையின் பெயரில் சட்டவிரோதமாக அந்த ஆலை இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆலைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.

ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி

பாளையங்கோட்டையில் வாடகை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் துன்புறுத்துவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது. பாளையங்கோ... மேலும் பார்க்க

பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: அக்.2-இல் மதுக் கடைகள் மூடல்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபா் 2-ஆம் தேதி மதுபானக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்ட... மேலும் பார்க்க

பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி

பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்... மேலும் பார்க்க

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வி

நான்குனேரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லாத் தீா்மானம் தோல்வியடைந்தது. திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாா்டுகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக ... மேலும் பார்க்க

நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க