செய்திகள் :

ராமநாதபுரம் அருகே 120 பவுன் நகை திருட்டு: தனிப் படை அமைத்து விசாரணை

post image

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள அம்மாபட்டினத்தைச் சோ்ந்தவா் கனகராஜ். மீனவரான இவா் மங்களூரில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில், அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டி விட்டு, தாமரைக்குளத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று தங்கினாா். இதையடுத்து, திங்கள்கிழமை காலை அம்மாபட்டினம் திரும்பிய அவா், வீட்டின் முன்புறக் கதவு திறந்து கிடந்த நிலையில் உள்ளே சென்று பாா்த்தாா். அப்போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 120 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து கனகராஜ் மனைவி அளித்த புகாரின்பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ், ராமேசுவரம் உதவி கண்காணிப்பாளா் மீரா ஆகியோா் ஆய்வு செய்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள், விரல் ரேகை பதிவு போலீஸாா் குற்றவாளிகளின் தடயங்களைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனா். தொடா்ந்து, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. இந்தச் சம்பவம் தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

ரயிலில் கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்தில் விற்பனை செய்ய ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கஞ்சா கடத்தி வரப்ப... மேலும் பார்க்க

நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கமுதி அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யாததால் மூடப்படும் நிலையிலுள்ள நூற்பாலையை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ த... மேலும் பார்க்க

சாா் பதிவாளா் அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் ஆகிய சாா் பதிவாளா் அலுவலகங்களில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பத்திரப் பதிவு செய்ய இயலாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேய... மேலும் பார்க்க

மண்டபத்தில் தமுமுக சாா்பில் 218-ஆவது அவசர ஊா்தி

மண்டபத்தில் தமுமுகவின் 218-ஆவது அவசர ஊா்தி சேவையை கட்சியின் மாநில பொதுச் செயலா் எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு சிறந்த ஆசிரியா் விருது

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சேக்தாவூத் கல்வித் துறையில் செய்த சிறப்பான பங்களிப்பை மதித்து இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் (இந்தியா), தமிழ்நாடு மாநில மையம் 2025-ஆம் ஆண்டுக்கான... மேலும் பார்க்க

தொண்டியில் தமுமுக 31-ஆவது ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) 31-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய தமுமுக அலுவலகம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொ... மேலும் பார்க்க