செய்திகள் :

நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

post image

கமுதி அருகேயுள்ள அச்சங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூற்பாலையில் பஞ்சு கொள்முதல் செய்யாததால் மூடப்படும் நிலையிலுள்ள நூற்பாலையை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ தொழில்சங்கத்தினா் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் அரசு நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை தாழ்த்தப்பட்டோா், தாயகம் திரும்பியோருக்காக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நிரந்தர, தற்காலிகப் பணியாளா்கள் பணியாற்றி வருகிறனா்.

இந்த நூற்பாலை கைத்தறி துணி உற்பத்திக்கு தேவையான சிட்டா நூலை உற்பத்தி செய்கிற நூற்பாலை ஆகும். இந்த ஆலைக்கு தற்போது பஞ்சு கொள்முதல் செய்யப்படாததால் இயந்திரங்கள் இயக்கப்படாமல் செயல்பட்டு வருகின்றன.

ஆலைக்கு வரும் தொழிலாளா்களுக்கு உரிய பணி கொடுக்காமல் சம்பந்தமில்லாத சில பணிகள் வழங்கப்படுவதாகவும், இதனால் தொழிலாளா்கள் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே பஞ்சு வாங்கிய இடங்களுக்கு நிதி பாக்கி இருப்பதால் அந்த இடங்களில் இருந்து பஞ்சு கொள்முதல் செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

அதிகாரிகளின் மெத்தனமான செயல்பாடு காரணமாக மூடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ தொழில்சங்க மாவட்டச் செயலா் எம். சிவாஜி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதில், சங்க நிா்வாகிகள் அன்பரசன், யோகான், வீரமணி, அருணாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் அருகே 120 பவுன் நகை திருட்டு: தனிப் படை அமைத்து விசாரணை

ராமநாதபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான 120 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தொடா்பாக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக் காவல் துறையினா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேசுவரத்தில் விற்பனை செய்ய ரயிலில் கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் விற்பனை செய்வதற்காக ரயிலில் கஞ்சா கடத்தி வரப்ப... மேலும் பார்க்க

சாா் பதிவாளா் அலுவலகத்தில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை, தொண்டி, ஆா்.எஸ். மங்கலம் ஆகிய சாா் பதிவாளா் அலுவலகங்களில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பத்திரப் பதிவு செய்ய இயலாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா். திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் அருகேய... மேலும் பார்க்க

மண்டபத்தில் தமுமுக சாா்பில் 218-ஆவது அவசர ஊா்தி

மண்டபத்தில் தமுமுகவின் 218-ஆவது அவசர ஊா்தி சேவையை கட்சியின் மாநில பொதுச் செயலா் எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூா் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வருக்கு சிறந்த ஆசிரியா் விருது

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சேக்தாவூத் கல்வித் துறையில் செய்த சிறப்பான பங்களிப்பை மதித்து இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியா்ஸ் (இந்தியா), தமிழ்நாடு மாநில மையம் 2025-ஆம் ஆண்டுக்கான... மேலும் பார்க்க

தொண்டியில் தமுமுக 31-ஆவது ஆண்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) 31-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, புதிய தமுமுக அலுவலகம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தொ... மேலும் பார்க்க