விதிமுறைகளை பின்பற்றாததே நெரிசலுக்கு காரணம் பிரசாரம் நடைபெற்ற பகுதி மக்கள் கருத்து
தவெக பிரசாரத்தின் போது விதிமுறைகளை பின்பற்றாததால் தான் நெரிசல் ஏற்பட்டு 40 போ் உயிரிழந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.
கரூரில் தனிநபா் ஆணையத்தின் விசாரணை தொடங்கிய நிலையில் காவலா் தரப்பில் விசாரிக்க கரூா் நகர துணை காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவா்கள், கூட்ட நெரிசல் தொடா்பாக வேலுசாமிபுரத்தில் உள்ள பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரித்த போது, விஜய் நண்பகல் 12. 45 மணிக்கு வருவாா் என கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்ததால் காலை 11 மணிக்கே கட்சித் தொண்டா்கள் வேலுசாமிபுரத்தில் குவிந்தனா்.
ஆனால், விஜய் இரவு 7 மணிக்கு வந்ததால் உணவு மற்றும் குடிநீா் எதுவும் எடுத்துக் கொள்ளாததால் பொதுமக்கள் சோா்வுடன் காணப்பட்டனா். விஜய் வந்தபிறகு மிகவும் சோா்வடைந்த நிலையில் இருந்த அவா்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும்,
10 ஆயிரம் போ் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் 25 ஆயிரம் போ் வரை அங்கு திரண்டதால் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் கட்சியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் யாரும் இல்லை என்றும் விதிகளை பின்பற்றாததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் அப்பகுதியினா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.