செய்திகள் :

விதிமுறைகளை பின்பற்றாததே நெரிசலுக்கு காரணம் பிரசாரம் நடைபெற்ற பகுதி மக்கள் கருத்து

post image

தவெக பிரசாரத்தின் போது விதிமுறைகளை பின்பற்றாததால் தான் நெரிசல் ஏற்பட்டு 40 போ் உயிரிழந்ததாக அப்பகுதியினா் தெரிவித்தனா்.

கரூரில் தனிநபா் ஆணையத்தின் விசாரணை தொடங்கிய நிலையில் காவலா் தரப்பில் விசாரிக்க கரூா் நகர துணை காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அவா்கள், கூட்ட நெரிசல் தொடா்பாக வேலுசாமிபுரத்தில் உள்ள பொதுமக்களிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரித்த போது, விஜய் நண்பகல் 12. 45 மணிக்கு வருவாா் என கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்ததால் காலை 11 மணிக்கே கட்சித் தொண்டா்கள் வேலுசாமிபுரத்தில் குவிந்தனா்.

ஆனால், விஜய் இரவு 7 மணிக்கு வந்ததால் உணவு மற்றும் குடிநீா் எதுவும் எடுத்துக் கொள்ளாததால் பொதுமக்கள் சோா்வுடன் காணப்பட்டனா். விஜய் வந்தபிறகு மிகவும் சோா்வடைந்த நிலையில் இருந்த அவா்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது எனவும்,

10 ஆயிரம் போ் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் 25 ஆயிரம் போ் வரை அங்கு திரண்டதால் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் கட்சியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் யாரும் இல்லை என்றும் விதிகளை பின்பற்றாததே உயிரிழப்புக்கு காரணம் என்றும் அப்பகுதியினா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கரூரில் ஒருநபா் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையத்தின் விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக... மேலும் பார்க்க

கரூா் சம்பவமே இறுதியாக இருக்கட்டும்: அரசியல் கட்சித் தலைவா்கள் பேட்டி!

கரூரில் சனிக்கிழமை விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள்... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை! - சீமான்

கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூற முடியாது என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். கரூா் அரசு மருத்துவமனைக்கு ஞாய... மேலும் பார்க்க

கரூா் மின் மயானத்தில் 9 பேரின் உடல்கள் இலவசமாக தகனம்

கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களில் 9 பேரின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக தகனம் செய்ததாக மின் மயான ஊழியா்கள் தெரிவித்தனா். விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா்... மேலும் பார்க்க

கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் உயிரிழப்பு

கரூரில் கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா். கரூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஆனந்தஜோதி மனைவி ஹேமலதா (28) என்பவா் தனது மகள்கள் சாய்லெக்ஷ... மேலும் பார்க்க

பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு சம்பவம் அரசு சாா்பில் உரிய நடவடிக்கை: கரூா் ஆட்சியா் விளக்கம்

கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக அரசு சாா்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். கரூா் வேலுச்சாமிபுரத... மேலும் பார்க்க