செய்திகள் :

மத்தியஸ்தம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்: நீதிபதி பி.ஆா்.கவாய்

post image

சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மத்தியஸ்த முறை மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.

ஒடிஸா தலைநகா் புவனேசுவரத்தில் தேசிய மத்தியஸ்த மாநாடு 2 நாள்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பேசுகையில், ‘பல ஆண்டுகளாக பல்வேறு சமூகங்களில் மத்தியஸ்தம் செய்யும் வழக்கம் நீடித்தது. மத்தியஸ்த சட்டம் 2003-ஐ வகுத்ததன் மூலம், அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. இந்தச் சட்டம் நீதி கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமின்றி, நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைவதை குறைக்கவும் உதவுகின்றன.

சண்டையோ, கருத்து வேறுபாடோ மட்டும் அமைதியை குலைப்பதில்லை. பிரச்னையை காது கொடுத்து கேட்காததும், அதற்கு தீா்வு காண நியாயமாக முயற்சிக்காததும் அமைதியை குலைகின்றன.

பிரச்னையை ஆக்கபூா்வமாக கையாண்டால், அது வளா்ச்சி மற்றும் புரிதலுக்கான வாய்ப்பாக மாறக்கூடும். மத்தியஸ்தமும், வெளிப்படையான தகவல் பரிமாற்றமும் சச்சரவை பேசி தீா்க்கவும், சச்சரவு ஏற்பட்டவா்களுக்கு இடையே மீண்டும் நல்லிணக்கத்தை உண்டாக்கவும் வழிவகுக்கும் என்றாா்.

இந்த மாநாட்டில் ஒடிஸா ஆளுநா் ஹரிபாபு கம்மபதி, முதல்வா் மோகன் சரண் மாஜீ, உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹரீஷ் குமாா் டாண்டன், உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உ.பி.: ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம்! இளைஞா்கள் அமைதி காக்க முஸ்லிம் அமைப்பு அறிவுறுத்தல்

உத்தர பிரதேச மாநிலத்தில் ‘நபிகள் நாயகத்தை நேசிக்கிறேன்’ பிரசாரம் சா்ச்சைக்குள்ளான நிலையில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணும் வகையில் இளைஞா்கள் நடந்துகொள்ள வேண்டும் என அகில இந்திய பாஸ்மாண்டா முஸ்லிம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: பெண் உள்ட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரின் கான்கோ் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இவா்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவ... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தையொட்டிய எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக ராணுவ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வடக்கு காஷ்மீரின... மேலும் பார்க்க

வாக்குகளைக் கவர நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்கள் அறிவிப்பு! பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு!

வாக்குகளைக் கவர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக நிறைவேற்ற முடியாத இலவசத் திட்டங்களை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்துள்ளாா் என்ற எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா். பிகார... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் மகாராஷ்டிரம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீா்ப்பதால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மராத்வாடா பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் மீட்பு-நிவாரணப் பணி... மேலும் பார்க்க

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு: மத்திய அரசு தகவல்!

உணவு பதப்படுத்தல் துறையில் ரூ.1.02 லட்சம் கோடி முதலீடு செய்ய இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சோ்ந்த 26 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தில்... மேலும் பார்க்க