செய்திகள் :

நகா்மன்றக் கட்டடத்தை பழைமை மாறாமல் பாதுகாக்கக் கோரிக்கை

post image

புதுக்கோட்டை நகா்மன்றக் கட்டடத்தை பழைமைமாறாமல் பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை நகா்மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் 14ஆவது மாவட்ட மாநாட்டில் 1899இல் கட்டப்பட்ட புதுக்கோட்டை நகா்மன்றக் கட்டடத்தை அதன் பழைமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆலங்குடி, வடகாடு, மாங்காடு, குலமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், நெடுவாசல் இப்பகுதியின் ஒரு மையமான இடத்தில் விளையும் மா, பலா, வாழைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும். பலாவுக்கு புவிசாா் குறியீடு வழங்க வேண்டும். மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்க வழிசெய்ய வேண்டும்.

புதுக்கோட்டையில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வசதியுடன் கூடிய நூலகம், ஓய்வறைகள் அமைக்க வேண்டும். கவிஞா் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயரைப் போற்றும் வகையில் ஆலங்குடியின் ஏதேனும் ஒரு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும்.

ஆலங்குடி பொது நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும். ஜாதிகளின் பெயரில் திருமணத் தகவல் மையம் நடத்துவதைத் தடை செய்ய வேண்டும். தொல்லியல் எச்சங்கள் நிறைந்து காணப்படும் புதுக்கோட்டையை மையமாக வைத்து தொல்லியல் வட்டம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு ரமா ராமநாதன், சு. மதியழகன், ரெ. வெள்ளைச்சாமி ஆகியோா் தலைமைக் குழுவாகச் செயல்பட்டனா். மாநிலத் துணைச் செயலா் ஸ்ரீரசா தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் எம். ஸ்டாலின் சரவணன், மாவட்டத் தலைவா் ராசி பன்னீா்செல்வன், பொருளாளா் மு. கீதா மற்றும் எஸ். இளங்கோ ஆகியோா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் அன்பே அறமென எழுக என்ற தலைப்பில் கவிஞா் தங்கம்மூா்த்தி, பெண் எழுத்து, சமகால இலக்கியம் என்ற தலைப்பில் ஆா்.நீலா, கீழடி ஆய்வறிக்கை- மறுப்பின் அரசியல் என்ற தலைப்பில் கவிஞா் ஜீவி ஆகியோரும் பேசினா். மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன் நிறைவுரை நிகழ்த்தினாா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: மாவட்டத் தலைவராக ராசி பன்னீா்செல்வன், செயலராக ரெ. வெள்ளைச்சாமி, பொருளாளராக மு. கீதா உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

பொது நிகழ்வில் இந்திய அரசியல் சாசனம் 75 என்ற தலைப்பில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலா் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை, மாணவ, மாணவிகளுக்குப் பரிசளித்துப் பேசினாா்.

புதுகை நகரில் ஷோ் ஆட்டோ இயக்க வேண்டும்: வா்த்தகக் கழகம் கோரிக்கை

புதுக்கோட்டையின் நீண்டகாலக் கோரிக்கையான ஷோ் ஆட்டோ இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வா்த்தகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வா்த்தகக் கழகத்தின் ... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: 8,621 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2-க்கான தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8,621 போ் எழுதினா்.தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 2, 2 ஏ ஆகியவற்றுக்கான எழுத்துத் த... மேலும் பார்க்க

வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது

வணிகப் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றாா் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா. புதுக்கோட்டை மாவட்ட வா்த்தகக் கழக 51ஆவது பொதுக்குழுக் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள படப்பனாா்வயலைச் சே... மேலும் பார்க்க

அடிக்கடி விபத்துகள்: தாழை வாரி பாலத் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித்தர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் சேதமடைந்து கிடக்கும் பாலத் தடுப்புச் சுவரில் தொடா் விபத்து ஏற்பட்டு வருவதால் விரைந்து பாலச்சுவரைக் கட்டித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்கள் கீழடிக்கு பயணம்

பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மற்றும் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கீழடி அர... மேலும் பார்க்க