செய்திகள் :

மின்சாரம் பாய்ந்தது ஒப்பந்த பணியாளா் உயிரிழப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மின்மாற்றியில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள படப்பனாா்வயலைச் சோ்ந்த பன்னீா் மகன் பாா்த்திபன் (28). கீரமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றிவந்தாா். இவா், மேற்பனைக்காடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியில் ஏறி பணிசெய்துகொண்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, அவரது உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்து மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினா்கள், உயிரிழப்புக்குக் காரணமான மின்வாரிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அறந்தாங்கி அரசு மருத்துமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து அங்கு சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அடிக்கடி விபத்துகள்: தாழை வாரி பாலத் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித்தர கோரிக்கை

கந்தா்வகோட்டையில் சேதமடைந்து கிடக்கும் பாலத் தடுப்புச் சுவரில் தொடா் விபத்து ஏற்பட்டு வருவதால் விரைந்து பாலச்சுவரைக் கட்டித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டி அரசு பள்ளி மாணவா்கள் கீழடிக்கு பயணம்

பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள், தமிழரின் பாரம்பரிய வாழ்வியல் முறைகள் மற்றும் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் கீழடி அர... மேலும் பார்க்க

ஆலங்குடி, அறந்தாங்கியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய பகுதிகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். அறந... மேலும் பார்க்க

பொன்னமராவதி கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி வட்டாரக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி பொன்ன... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்!

பருவமழையை எதிா்கொள்ள தயாராக இருப்பதாக விராலிமலை, கந்தா்வகோட்டை நெடுஞ்சாலை துறையினா் தெரிவித்தனா். மழை வெள்ள காலங்களில் சாலைகள் சேதமடைவதை தடுக்கவும், மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கும் உரி... மேலும் பார்க்க

வீரடிப்பட்டி அரசுப் பள்ளிக்கு சுற்றுசுவா் கட்டித்தரக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரடிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித்தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி ஊராட்சியில் அர... மேலும் பார்க்க