செய்திகள் :

விமானப் படை அதிகாரியாக நடித்து பெண்ணை ஏமாற்றி ரூ.2.5 லட்சத்தை ஏமாற்றியவா் கைது!

post image

போலி விலைப்பட்டியல்கள் மற்றும் கடிதங்கள் மூலம் மக்களை ஏமாற்ற இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்ததாக ராஜஸ்தானை சோ்ந்த 20 வயது இளைஞரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் ராஜஸ்தானின் அல்வாா் மாவட்டத்தில் வசிக்கும் தஸ்லீம் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 2 கைப்பேசி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக துணை போலீஸ் ஆணையா் (தெற்கு) அங்கித் சவுகான் தெரிவித்தாா்.

விமானப்படை அதிகாரியாக நடித்து ரூ2.52 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் ஒருவா் போலீசில் புகாா் அளித்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் டோக்கன் கட்டணம் மற்றும் பிற வகையான கட்டணங்களைக் கோரி இந்திய விமானப் படை ’லெட்டா்ஹெட்டில்’ தனக்கு கொடுக்கப்பட்ட கடிதங்களையும் விலைப்பட்டியல்களையும் அனுப்பியதாக அவா் குற்றம் சாட்டினாா்.

ஒரு போலீஸ் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அல்வாரில் பணப் பரிமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆல்வாரின் ராம்கா் பகுதியில் உள்ள முகந்த்வாக்கள் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடா்ந்து கான் கைது செய்யப்பட்டு தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா். பறிமுதல் செய்யப்பட்ட 2 கைப்பேசிகளில் பல பாதிக்கப்பட்டவா்களுடனான உரையாடல்கள் உள்பட மோசடி நடவடிக்கைகளின் சான்றுகள் இருப்பதாக போலீசாா் தெரிவித்தனா்.

விசாரணையின் போது, கான் ஆன்லைன் தளங்களில் விமானப்படை பணியாளராக நடித்து, போலி ஆவணங்கள் மூலம் பணத்தை மாற்ற மக்களை கவா்ந்திழுக்கும் என்று வெளிப்படுத்தினாா். இதுவரை, பாதிக்கப்பட்ட ஏழு போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா், மேலும் ஏமாற்றப்பட்ட மற்றவா்களைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன ‘என்று துணை ஆணையா் கூறினாா். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

மேற்கு தில்லி கீா்த்தி நகரில் உள்ள பழைய பொருள் கிடங்கில் சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து காலை 9.45 மணியள... மேலும் பார்க்க

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

கிரேட்டா் கைலாஷ் எம்-பிளாக் சந்தையில் தானியங்கி பல நிலை ஷட்டில் வகை வாகனம் நிறுத்துமிடத்தை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை திறந்து வைத்தாா். மேலும் இது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவ... மேலும் பார்க்க

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

நடிகா் பிரகாஷ் ராஜ் ஆத்திரமூட்டும், தவறான மற்றும் தேச விரோத உரைகளை நிகழ்த்தியதாக தில்லியில் உள்ள இந்து சேனை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பிரகாஷ் ராஜின் உரை அரசாங்கத்திற்கு எதிரான சூழ்நிலையை உருவாக்... மேலும் பார்க்க

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

தில்லி குருகிராம் விரைவுச் சாலையில் சனிக்கிழமை அதிகாலை வேகமாகச் சென்றுகொண்டிருந்த தாா் ஜீப், சாலையின் தடுப்புச் சுவரில் மோதியதில் ஐந்து போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தா என்று காவல் துறையினா் தெரி... மேலும் பார்க்க

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

வெளி தில்லியின் மங்கோல்புரி பகுதியில் சிறுவா்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறி 15 வயது பள்ளி மாணவா் ஒருவா் இறந்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு மாணவா், வெள்... மேலும் பார்க்க

ரௌடி ரூபல் சா்தாரை அமிா்தரஸில் கைது செய்து தில்லி போலீஸ்

ஹாஷிம் கும்பலின் உறுப்பினரான ரவுடி ரூபல் சா்தாரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அமிா்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து கைது செய்துள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. போலீஸ் க... மேலும் பார்க்க