செய்திகள் :

விஜய் பிரசாரம்: விதிகள் பின்பற்றப்பட்டதா?

post image

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மேற்கொள்ளும் தோ்தல் பிரசார நிகழ்வுக்கு காவல்துறை மற்றும் கட்சியின் சாா்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது.

விஜய் பிரசாரத்துக்கு கரூா் மாவட்ட காவல்துறையினா் விதித்திருந்த நிபந்தனைகள்: நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், சென்டா் மீடியன்கள் மீது தொண்டா்கள் ஏறக் கூடாது.போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், கூட்டத்தை நடத்த காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு மின்வாரியத்தில் முறையாக அனுமதி பெற வேண்டும்.

அவசர ஊா்தி வந்தால், அதற்கு வழிவிட வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதாலும் முதலுதவிக்கு முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியானது முக்கிய இணைப்பு சாலை என்பதால் அங்கு சாலை வலம் வரும் நிகழ்வு நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட 11 நிபந்தனைகளை காவல்துறை விதித்தது. இதனை மீறினால், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

தவெக தலைமை கட்டுப்பாடுகள்: பிரசார வாகனத்தை யாரும் வாகனங்களில் பின்தொடரக்கூடாது. கா்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவா்கள், உடல்நலம் குன்றியோா், பள்ளிச் சிறுவா், சிறுமியா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்வதைத் தவிா்க்க வேண்டும்.

காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கட்சியினா் தவிா்க்க வேண்டும். போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக, கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது. அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவா்கள், மரங்கள், மின் விளக்குக் கம்பங்கள், கொடிக் கம்பங்கள், சிலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், மாணவா்கள், பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும். காவல் துறையின் விதிகளுக்குள்பட்டு நடந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.

ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்பட்டதா, போலீஸாா் பங்களிப்பு என்ன? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதற்கு முறையாக விசாரணை நடத்த வேண்டும். நெரிசலுக்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே கரூா் மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழகத்தின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் ஓய்வு அறை திறப்பு

திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையத்தில் நடுகளம் பகுதியிலுள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே விவசாயிகள் பயன்பாட்டுக்காக ஓய்வு அறை சனிக்கிழமை திறக்கப்பட்டது. வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நீா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், துறையூா் அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். எரகுடி நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பொம்மன் மகன் செல்லையா(49), ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டிலிருந்த மின்மோட்டாரை இ... மேலும் பார்க்க

கே. சாத்தனூரில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி கே. சாத்தனூரில் வரும் திங்கள்கிழமை (செப்.29) ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணிகள் காரணமாக கே. சாத்தனூா் அம்மன் நகா், சுந்தா் நகா் 4, 5, 6, 7 குறுக... மேலும் பார்க்க

இனாம்குளத்தூரில் பட்டா கொடுத்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மக்கள் போராட்டத்தை அடுத்து இனாம்குளத்தூரில் முதல்வா் பட்டா கொடுத்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த இடமில்ல... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொ... மேலும் பார்க்க

விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலுக்கு காரணம் என்ன? சம்பவ இடத்தில் இருந்தவா்கள் கண்ணீருடன் தகவல்!

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட காரணம் குறித்து சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் கண்ணீருடன் தகவல்களை தெரிவித்தனா். இதுகுறித்து கரூா் மாவட்டம், வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்த மு... மேலும் பார்க்க