செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல் பலி: 34 பேரின் விவரம் வெளியீடு!

post image

கரூர் கூட்ட நெரிசல் பலியானவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் பலியான 39 பேரில் 38 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 25 பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் கண்டறியப்படவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பலியான 34 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 28 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 6 பேர் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!

Details of the victims of the Karur stampede have been released.

கரூர் கூட்ட நெரிசல்: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் மத்திய அரசு நிவாரணம்!

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், பிரதமர்... மேலும் பார்க்க

தவெகவின் மோசமான அரசியலை ஆதரிக்கும் அதிமுக: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தவெகவின் மோசமான அரசியலை அதிமுக ஆதரிப்பதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்... மேலும் பார்க்க

கரூர் துயரம்- தமிழக அரசிடம் அறிக்கை கேட்டார் ஆளுநர்

கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை

கரூர் நெரிசலில் சிக்கி பலியானோரின் உடல்களைக் காண முற்பட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை, அப்பகுதியினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கரூரில் தவெக பிராசாரக் கூட்டத்தில் சிக்கி ப... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: நீதிமன்றம் விசாரிக்க தவெக கோரிக்கை?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து நீ... மேலும் பார்க்க

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தி... மேலும் பார்க்க