செய்திகள் :

கரூர்: 'எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்'- செல்வப்பெருந்தகை

post image

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பின் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்திருக்கிறார்.

"மிகவும் வேதனை அளிக்கிறது, வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற அசாம்பாவிதங்கள், பலிகள் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடாது.

விஜய் பிரசாரம் கரூர்
விஜய் பிரசாரம் கரூர்

எல்லா அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாமர மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு குழந்தை காவியா 10-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறது. வாக்குரிமை கூட கிடையாது.

இனிவரும் காலங்களில் இதையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மரணங்களைத் தவிர்க்க வேண்டும்.

7 மணி நேரம் 40 நிமிடம் தண்ணீர், உணவு இல்லாமல் கும்பலில் சிக்கி என்ன பண்ணுவார்கள்.

காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்க ஆலோசனை செய்துகொண்டிருக்கிறோம் ” என்று கூறியிருக்கிறார்.

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்த... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிற... மேலும் பார்க்க

கரூர்: ``படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்'' - சீமான்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க