செய்திகள் :

கரூர் பலி: பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் - ஆட்சியர்

post image

கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆட்சியர் தங்கவே, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களுடம் ஆட்சியர் பேசியதாவது, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இறந்த நிலையில் 39 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

40 பேர் பலி

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு, 7 மணி நேரம் தாமதமாக கரூருக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது, அவரைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

அவர் இரவு 7 மணியளவில் பேசத் தொடங்கியபோது, ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்தபடி கூட்டம் அலைமோதியது. இதில் கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் நேற்று பலியாகினர். இன்று சிகிச்சைப் பெற்றுவந்த மேலுமொருவர் பலியானதால், கூட்ட நெரிசல் பலி எண்ணிகை 40 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு

Karur stampede Control center to help victims - Collector

கரூர் பலி: மின்மாற்றி மீது தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை - மின்வாரியம்

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது தொண்டர்கள் மின்மாற்றியின் மீது ஏறியபோது மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின... மேலும் பார்க்க

கரூர் பலி: அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது!

கரூர் துயரச்சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒருநபர் விசாரணை தொடங்கியது. அப்பகுதி மக்களிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் என்ன நடந்ததென அவர் விசாரணை மேற்கொள்கிறார். தூத்... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்தில் 2 வயது குழந்தை பலி: “குழந்தையை அழைத்துச் சென்றது எங்கள் தவறு!” -பெற்றோர்

கரூரிக் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 2 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரூரின் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் அரசியல் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த கட... மேலும் பார்க்க

முதலுதவி செய்யாமல் சென்றது கண்டிக்கத்தக்கது: பெ. சண்முகம்

விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியும் செய்யாதது கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

கரூர் பலி: வேதனை அளிக்கிறது - தில்லி முதல்வர்

கரூரில் நேர்ந்த துயரமான சம்பவம் வேதனை அளிப்பதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்திற்கு 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம்

விஜய் பிரசாரத்துக்கு மொத்தம் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கமளித்துள்ளார். இதுறித்து கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவ... மேலும் பார்க்க