செய்திகள் :

கரூர் பலி: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!

post image

கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதேநேரம், இந்த கோர சம்பவத்துக்கு இந்தியளவிலுள்ள அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல்களைக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர்கள் மம்மூட்டியும் மோகன்லாலும், “கரூரில் நடந்த சம்பவம் துன்பமளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு இரங்கல்களைத் தெரிவிக்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

actors mammooty and mohanlal convey their condolences for karur stampede

பூத்துக் குலுங்கும் சாமந்தி பூக்கள் - புகைப்படங்கள்

வாசனை மிகுந்த மலர்களால் அம்பிகையை அலங்கரிக்க பூக்களை பறிக்கும் பெண்கள்.பெரும்பாலும் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் சாமந்தி பூக்கள்.தோற்றத்தில் மென்மையானதாகவும் சிறியதாகவும் உள்ள சாமந்தி பூக்கள்.செ... மேலும் பார்க்க

கவர்ச்சி நடனத்தில் ரஷ்மிகா..! தம்மா முதல் பாடலின் டீசர்!

நடிகை ரஷ்மிகாவின் கவர்ச்சி பாடலின் டீசர் விடியோ வெளியாகியுள்ளது. முழுமையான பாடல் நாளை (செப்.29) வெளியாகவுள்ளது.ஹிந்தியில் தம்மா எனும் படத்தில் ரஷ்மிகா மந்தனா சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளா... மேலும் பார்க்க

கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக விஜய் சேதுபதியின் திரைப்பட நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தலைவன் தலைவி வெற்றியைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர்... மேலும் பார்க்க