செய்திகள் :

எங்களுடைய மகனை நினைத்து பெருமையாக உள்ளது; அபிஷேக் சர்மாவின் தந்தை பேட்டி!

post image

எங்களது மகனை நினைத்து பெருமையாக உள்ளது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா பேசியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

41 ஆண்டுகால ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். டி20 வடிவிலான ஆசிய கோப்பை தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இந்த நிலையில், எங்களது மகனை நினைத்து பெருமையாக உள்ளது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் தந்தை ராஜ்குமார் சர்மா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் எந்த அணி நன்றாக விளையாடுகிறதோ அந்த அணி வெற்றி பெறும். இந்திய அணி நன்றாக விளையாடி ஆசிய கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அபிஷேக் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எங்களுடைய மகன் நாட்டுக்காக விளையாடுவதை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம். நாட்டுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் அவருக்கு கற்றுக் கொடுத்துள்ளோம் என்றார்.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 309 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajkumar Sharma, father of Indian team opener Abhishek Sharma, has said that he is proud of his son.

இதையும் படிக்க: பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது; இளம் ரசிகர்கள் கருத்து!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாக... மேலும் பார்க்க

பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது; இளம் ரசிகர்கள் கருத்து!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானால் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என இளம் ரசிகர்கள் பலரும் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த நேபாளம்!

நேபாள கிர்க்கெட் அணி, தன்னுடைய டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடும் ஓர் அணியை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 19 ரன்கள் வித்... மேலும் பார்க்க

இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சிக்கல்! மாற்று வீரர் யார்?

இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை ஹார்திக் பாண்டியா அணியில் இல்லையெனில்... மேலும் பார்க்க

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல் ஆசிய சாம்பியன் யாா்?

முதன்முறையாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சாம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக நாட்டில் ஆசியக் க... மேலும் பார்க்க

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும்: முன்னாள் பாக். வீரர்

ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான... மேலும் பார்க்க