செய்திகள் :

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

post image

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை.

உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்துக்கு இந்த உழவர் சந்தை திடலில்தான் அனுமதி கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

உழவர் சந்தை திடல்
உழவர் சந்தை திடல்

அதேமாதிரி, முப்பெரும் விழாவிற்கு முன்பாக செந்தில் பாலாஜியும் இதே இடத்தில் கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டம் பெரிதாக நடந்ததில்லை என்றும் இங்கிருக்கும் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை போட மட்டும் வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.

லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதி நகரின் முக்கிய பகுதியாக இருக்கிறது. இந்த ரவுண்டானாவை கடந்துதான் அமராவதி பாலம் வழியாக திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.

லைட் ஹவுஸ் ரவுண்டானா
லைட் ஹவுஸ் ரவுண்டானா

போக்குவரத்து இயக்கம் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால், அரசியல் கட்சிகளின் கூட்டம் உழவர் சந்தை பகுதிகளிலேயே அதிகம் நடக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

நாங்கள் கேட்ட உழவர் சந்தை அல்லது லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் கூட்டம் கூட்டியிருந்தால் சேதாரம் ஏற்பட்டிருக்காது என தவெக தரப்பில் கூறுவது குறிப்பிடத்தக்கது.

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" - அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமா... மேலும் பார்க்க

கரூர்: அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யும் தடயவியல் துறை; விசாரணையைத் தொடங்கிய அருணா ஜெகதீசன்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: "கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்" - மம்முட்டி இரங்கல்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆ... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க