செய்திகள் :

கரூர்: `இது சினிமா ஷூட்டிங் இல்லை, விஜய் மக்களுடன் நின்றிருக்க வேண்டும்' - வானதி சீனிவாசன்

post image

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துயரச் சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 

இந்த நிலையில், காலையிலிருந்து அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ``மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த இழப்பு மிகவும் துயரமாக இருக்கிறது. தேர்தல் காலத்தில் கூட்டங்கள் நடத்துவது இயல்பானது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

ஆனால், 5000 பேர்கூட நிற்க முடியாத இடத்தில் மாநில காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. அதே நேரம் கூட்டத்துக்கான முறையான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. இதை நினைக்கும்போது கோபமாக வருகிறது.

ஏன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார்கள் எனத் தெரியவில்லை. விஜய் அரசியலுக்கு புதியவர். கட்சியிலும் பெரியளவில் அனுபவம் வாய்ந்தவர்கள் இல்லை. இதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களைக் கூட்டுவது மட்டுமல்ல, கூடிய மக்களை பத்திரமாக திரும்ப அனுப்புவது என்பதும் அனுபவம் சார்ந்தது. இன்னும் விஜயைப் பார்க்க வந்த கூட்டம் இப்படி ஆபத்தில் சிக்கியிருக்கிறது.

உயிர்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு தலைவன் அந்த இடத்தைவிட்டுச் செல்வானா? அவரைப் பார்க்க வேண்டும் என குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறார்கள்.

அதையெல்லாம் இழந்து நிற்கிறார்கள் என்றால், அவரால் எப்படி அவர் வீட்டுகுச் செல்ல முடிந்தது. சினிமா ஷூட்டிங்க் மாதிரி கட்சிக் கூட்டத்தை நடத்தமுடியாது. அரசியல் என்பது வேறு. அது மக்களுக்கானது. மக்களுடன் நிற்க வேண்டியது" எனத் தெரிவித்திருகிறார்.

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்த... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: 'அடுத்த வார விஜய் பரப்புரைகள் தற்காலிக ரத்து' - தவெக

நேற்று கரூரில் பரப்புரையை மேற்கொண்டிருந்தார் தவெக தலைவர் விஜய். அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்துவருகிற... மேலும் பார்க்க

கரூர்: ``படபடப்பு இருக்கும்; தம்பி விஜய் வரவில்லை என்றாலும் அவர் கட்சியினர் வருவார்கள்'' - சீமான்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் துயர சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருக... மேலும் பார்க்க