செய்திகள் :

இனி விஜய்யின் பேச்சு தொடருமா?

post image

கரூர் சம்பவத்தால் விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன.

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

இந்த பலிகளுக்கு விஜய்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சியின் மோசமான செயல்பாடுகள்தான் இழப்பிற்குக் காரணம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதேநேரம், சம்பவம் நடந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுடன் நின்றிருக்க வேண்டிய விஜய் அவசரமாக சென்னை கிளம்பினார். மாநில முதல்வர் சென்னையிலிருந்து கரூர் வந்து பலியானர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னதுடன் பத்திரிகையாளர்களையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பினார்.

ஆனால், விஜய்யிடமிருந்து ஒரு அறிக்கையைத் தவிர வேறு எதுவும் வராதது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, கரூரில் நடந்த கோரமான சம்பவத்தைத் தொடர்ந்து இனி விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.

தற்போதைய சூழலில் விஜய் நேரில் சென்றால் மீண்டும் நெரிசல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி பிற பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு மறுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலர் ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?

The Karur incident has called into question Vijay's next campaigns.

கரூர் பலி: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு?

கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்... மேலும் பார்க்க

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகரும் அபிஷேக் சர்மா!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட... மேலும் பார்க்க

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் பின்நவீனத்துவ இலக்கிய ஆக்கங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் இன்று ... மேலும் பார்க்க

சீமான் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்: திமுக கண்டனம்

பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போன்றவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம் என திமுக மாணவரணி செயலாளர் ராஜ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் இளைஞர் கொலை!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு அருகே காலி வீட்டுமனை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் களைகட்டும் பண்டிகைக் கால மின்வணிகம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பால் உற்சாகம் அடைந்துள்ள வாடிக்கையாளர்களால், மின்வணிக(இணையவழி) நிறுவனங்களின் பண்டிகைக் கால விற்பனை களைகட்டி வருகிறது.மின்வணிக நிறுவனமான அமேசான், அதன் விழாக்கால விற்பனையின் முதல் இரண்... மேலும் பார்க்க