செய்திகள் :

உத்தமபாளையத்தில் இளைஞர் கொலை!

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் இளைஞர் ஒருவரை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு அருகே காலி வீட்டுமனை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி உத்தமபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உடல்கூறாய்வுக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இளைஞர் கொலை செய்யப்பட்ட உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பு அருகே காலி வீட்டுமனை பகுதி.

இதுகுறித்து வழக்குப் பதிந்து உத்தமபாளையம் போலீஸாா் விசாரித்தனா். முதல் கட்ட விசாரணையில், இறந்தவர் உத்தமபாளையம் பி. டி .ஆர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த சையது அபுதாஹிர் மகன் முகமது மீரான்(25). இவர் கடந்த சில நாள்களுக்கு முன் கம்பம் அருகே புதுப்பட்டியில் சக நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், முகமது மீரானை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக, முகமது மீரானை கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குடியிருப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Youth murdered in Uthamapalayam

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 727 பணியிடங்கள்! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சீமான் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்: திமுக கண்டனம்

பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போன்றவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம் என திமுக மாணவரணி செயலாளர் ராஜ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் களைகட்டும் பண்டிகைக் கால மின்வணிகம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பால் உற்சாகம் அடைந்துள்ள வாடிக்கையாளர்களால், மின்வணிக(இணையவழி) நிறுவனங்களின் பண்டிகைக் கால விற்பனை களைகட்டி வருகிறது.மின்வணிக நிறுவனமான அமேசான், அதன் விழாக்கால விற்பனையின் முதல் இரண்... மேலும் பார்க்க

இத்தாலிய நிறுவனத்தை வாங்குகிறது டிவிஎஸ்!

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், இத்தாலியின் வாகன வடிவமைப்பு மற்றும் பொறியியல் நிறுவனமான என்ஜின்ஸ் இன்ஜினியரிங் எஸ்.பி.ஏ.வை வாங்கவிருப்ப... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

சென்னை: தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் விமா்சித்துள்ளாா்.சென்னையில் அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது:... மேலும் பார்க்க

சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் போஸ்!

ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனம் போஸ், தனது பணியாளர்களில் 13,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.கரோனா தொ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு சனிக்கிழமை காலை 7,645 கன அடியிலிருந்து வினாடிக்கு 7,268 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக ... மேலும் பார்க்க