செய்திகள் :

வடமேற்கு சீனாவில் நிலநடுக்கம்: 7 பேர் காயம், வீடுகள் சேதம்!

post image

வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

லாங்சி மாவட்டத்தின் கன்சு மாகாணத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 அலகுகளாகப் பதிவானது.

நிலநடுக்கத்தின்போது ஒருசில மேற்கூரை ஓடுகள் சிதறி வீடுகளின் முது விழுந்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன. இதில் ஏழு பேர் காயமடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், யாருக்கும் பெரியளவில் காயங்கள் ஏற்படவில்லை.

மாகாண தலைநகரான லான்சோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையப்பகுதி இருந்தது.

எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்று மாநில ஒளிபரப்பு சிசிடிவி தெரிவித்துள்ளது.

அவசர பணியாளர்கள் சேதமடைந்த வீடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

A 5.6-magnitude earthquake scattered roof tiles and knocked over houses Saturday in northwest China's Gansu province, state media said.

இதையும் படிக்க: எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

அஸெஞ்ஜர் நிறுவனத்திலிருந்து 11,000+ ஊழியர்கள் நீக்கம்! சிஇஓவின் எச்சரிக்கை தகவல்

சர்வதேச முன்னணி பெரு நிறுவனங்களில் ஒன்றான அஸெஞ்ஜர், உலகம் முழுவதும் உள்ள தன்னுடைய நிறுவனங்களில் பணியாற்றி வந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கடந்த மூன்று மாதங்களில் பணிநீக்கம் செய்திருக்கிறது.ச... மேலும் பார்க்க

போர் முடிவுக்குப் பிறகு பதவி விலகுவேன்; மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன்: ஸெலென்ஸ்கி

ரஷியாவுடனான போர் முடிவுக்கு வந்தபிறகு அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகவும் மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.வொலோதிமீர் ஸெலென்ஸ்க... மேலும் பார்க்க

இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த வரி விதிப்பு நடைமுறை அக். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது... மேலும் பார்க்க

‘மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது’

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சில பகுதிகளையாவது இஸ்ரேல் அரசு தன்னுடன் இணைத்துக்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் விரிவான பேச்சுக்குத் தயாா்: ஐ.நா.வில் பாக். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். கடந்த ஏப்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பம்: சீனா வரவேற்பு

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளதாக, ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ... மேலும் பார்க்க