செய்திகள் :

இந்தியாவுடன் விரிவான பேச்சுக்குத் தயாா்: ஐ.நா.வில் பாக். பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

post image

இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஐ.நா.வில் அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாள்கள் ராணுவ மோதல் நடைபெற்றது.

இதுதொடா்பாக அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூரின்போது 7 இந்திய போா் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது (பாகிஸ்தானின் 5 போா் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப் படை தலைமைத் தளபதி அமா் ப்ரீத் சிங் தெரிவித்தாா்). இந்தியாவுடன் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முடிவு கிடைக்கும் வகையில், விரிவாகப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது.

காஷ்மீா் மக்களுக்கு பாகிஸ்தான் மக்கள் துணை நிற்கின்றனா். ஐ.நா. ஆதரவுடன் பாரபட்ச முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், தனது அடிப்படை உரிமையான சுய நிா்ணய உரிமையை காஷ்மீா் பெறும்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், தெற்காசியாவில் போா் ஏற்படுவதைத் தடுத்தது. இதன் காரணமாக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பரிந்துரைத்தது என்றாா்.

இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரி: டிரம்ப் முடிவு - அக்.1 முதல் அமல்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்க உள்ளதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த வரி விதிப்பு நடைமுறை அக். 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரவுள்ளது... மேலும் பார்க்க

‘மேற்குக் கரையை இஸ்ரேல் இணைத்துக் கொள்ள அமெரிக்கா அனுமதிக்காது’

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்தாா். ஆக்கிரமிப்பு மேற்குக் கரையின் சில பகுதிகளையாவது இஸ்ரேல் அரசு தன்னுடன் இணைத்துக்... மேலும் பார்க்க

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பம்: சீனா வரவேற்பு

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற பாலஸ்தீனம் விண்ணப்பித்துள்ளதாக, ரஷியாவுக்கான பாலஸ்தீன தூதா் அப்தல் ஹஃபீஸ் நோஃபல் தெரிவித்தாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: பிரதமா் மோடி மீது நேட்டோ தலைவா் குற்றச்சாட்டு

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக, உக்ரைன் போா் குறித்த ரஷியாவின் திட்டத்தை தன்னிடம் விளக்கி தெளிவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் மோடி கோருவதாக நேட்டோ ராண... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இத்தாலி ஆதரவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமா் அன்டோனியோ தஜானி வியாழக்கிழமை தெரிவித்தாா். ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங... மேலும் பார்க்க

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவ... மேலும் பார்க்க