செய்திகள் :

கைதில் இருந்து தப்பிக்க புதிய வழியில் பறந்த நெதன்யாகுவின் விமானம்?

post image

இஸ்ரேலில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் வழக்கமான பாதையைத் தவிர்த்து புதிய பாதையில் பயணித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டம், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றது. அப்போது, பேசிய உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் காஸா மீதான இஸ்ரேலின் போரை, பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலை எனக் குறிப்பிட்டு குற்றம்சாட்டி வருகின்றனர்.

இத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஸ்பெயின், அயர்லாந்து போன்ற நாடுகளின் அரசுகள் நெதன்யாகு தங்களது நாட்டுக்குள் வந்தால் கைது செய்வோம் என அறிவித்துள்ளன.

இந்த நிலையில், ஐ.நா. அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து விமானம் மூலம் நேற்று (செப். 25) நியூயார்க் நகருக்குச் சென்றடைந்தார்.

இந்தப் பயணத்தின்போது, நெதன்யாகுவின் விமானம் பல ஐரோப்பிய நாடுகளின் வான்வழியைத் தவிர்த்து புதிய பாதையில் பறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரது விமானம் வழக்கத்தை விட 600 கி.மீ. கூடுதலாகப் பயணித்துள்ளது.

இதுகுறித்து, விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையதளங்களில் வெளியான வரைப்படங்களில் அவரது விமானம் புதிய பாதையில் பறந்திருப்பது பதிவாகியுள்ளது.

முன்னதாக, ஐ.நா.வின் பொது அவைக் கூட்டத்தில் பிரான்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதையடுத்து, நெதன்யாகுவை கைது செய்ய வேண்டுமென ஐ.நா.வில் பல நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதால், கைது செய்யப்படுவதற்கு பயந்து அவரது விமானம் புதிய பாதையில் பறந்ததுள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: ஐ.நா.வில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

Israeli Prime Minister Benjamin Netanyahu's plane, which traveled from Israel to New York City, USA, has deviated from its usual route and traveled a new route.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இத்தாலி ஆதரவு

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை (எஃப்டிஏ) இறுதி செய்ய இத்தாலி ஆதரவளிப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமா் அன்டோனியோ தஜானி வியாழக்கிழமை தெரிவித்தாா். ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பங... மேலும் பார்க்க

ஐ.நாவில் நெதன்யாகு உரை! கூட்டாக வெளிநடப்பு செய்த தலைவர்கள்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கிய உடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த... மேலும் பார்க்க

அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!

பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரத... மேலும் பார்க்க

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்த... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக நாடுகளுக்க... மேலும் பார்க்க

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்... மேலும் பார்க்க