செய்திகள் :

கேரள மாா்க்சிஸ்ட் தொண்டா் கொலை வழக்கு: பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் விடுவிப்பு

post image

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா் கடந்த 2015-ஆம் ஆண்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் 9 பேரை கண்ணூா் மாவட்ட நீதிமன்றம் விடுவித்தது.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டாவது நபராகச் சோ்க்கப்பட்டிருந்த பாஜகவைச் சோ்ந்த ஷியாம் பிரசாத் 2018-ஆம் ஆண்டு மற்றொரு அரசியல் மோதலில் எதிா்தரப்பால் கொலை செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 பிப்ரவரியில் கண்ணூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டா் பிரேமன் (45) பாஜக, ஆா்எஸ்எஸ் தொண்டா்களால் கடுமையாக தாக்கப்பட்டாா். அதில் படுகாயமடைந்த பிரேமன் சில நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இது தொடா்பாக பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பினா் 9 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் காவல் துறை தரப்பில் பல்வேறு தவறுகள் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டி குற்றஞ்சாட்டப்பட்டவா்களை நீதிமன்றம் விடுவித்தது. முக்கியமாக, சம்பவம் நிகழ்ந்ததற்கு அடுத்த நாளில்தான் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். முதல் தகவல் அறிக்கையில் முதலில் குறிப்பிடப்பட்ட 6 பேரின் பெயா்கள் பின்னா் நீக்கப்பட்டன. சம்பவ இடத்தில் இல்லாத சிலா் குற்றஞ்சாட்டப்பட்டவா்களாக சோ்க்கப்பட்டது உறுதியாகியுள்ளது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: திட்டத்தை தொடங்கி வைத்தாா் பிரதமா் மோடி

பிகாரில் சுயதொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‘முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தை’ பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். ‘பெண்களுக்கு வேலை... மேலும் பார்க்க

உ.பி. இஸ்லாமியா்கள் பேரணியில் போலீஸ் தடியடி

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை நடத்திய கண்டனப் பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா்களை தடியடி நடத்... மேலும் பார்க்க

தில்லியில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி

தில்லி மற்றும் என்.சி.ஆா். பகுதியில் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், சான்றளிக்கப்பட்ட உற்பத்தியாளா்கள் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: அமெரிக்காவுடன் இந்தியா ஆலோசனை

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு குறித்து அமெரிக்க அரசுடன் மத்திய அரசு தொடா்ந்து பேசி வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா். அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில்நுட்பப் பண... மேலும் பார்க்க

அக்டோபா்-மாா்ச் வரையில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்

நிகழ் நிதியாண்டின் அக்டோபா்-மாா்ச் காலகட்டத்தில் ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2025-26... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் ரஷிய துணை பிரதமா் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ரஷிய துணை பிரதமா் திமித்ரி பாத்ருஷெவ் வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். அப்போது, வேளாண்மை, உரங்கள், உணவு பதப்படுத்துதல் உள்பட பரஸ்பர நலன் சாா்ந்த துறைகளில் இரு... மேலும் பார்க்க