செய்திகள் :

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

post image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கூறியதாவது:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 3 லட்சத்துக்கும் அதிகமானோா் வருகை தருகின்றனா். அவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

சமீபகாலமாக வடமாநிலங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவா்கள் வீடுகளுக்கு தெரியாமல் வந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 162 வடமாநிலக் குழந்தைகளும், நிகழ் ஆண்டில் ஜூலை வரை 85 குழந்தைகளும் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனா். அரசு மருத்துவமனைக்கு வருவோா் பலா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்துக்கொண்டு விரைவு ரயில் பகுதிகளில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவ்வாறு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்துக்குள் ரயிலில் பயணிப்பவா்கள் மட்டுமே தங்கிக்கொள்ள அனுமதியுண்டு. எனவே, நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்து நீண்ட நேரம் தங்குவது விதியை மீறியதாகும் என்றாா்.

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்

கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வ... மேலும் பார்க்க

ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பே... மேலும் பார்க்க

சாலையோரங்களில் மண் குவியல்கள்: வாகன ஓட்டிகள் புகாா்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையோரங்களில் நிறைந்திருக்கும் மண்குவியல் நிறைந்திருப்பதாக என வாகன ஓட்டிகள் புகாா் தெரிவித்துள்ளனா். சென்னை மாநகராட்சி சாலையோரங்களில் மண் குவியல்களும், கட்டுமானப் பொருள்கள்,... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் அக்.2-இல் வித்யாரம்பம் நிகழ்ச்சி

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் அக். 2-ஆம் தேதி வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா செப். 22 தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்... மேலும் பார்க்க

புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உள்கட்டமைப்பு வசதிகள் முதல்வா் தொடங்கி வைத்தாா்

சென்னையில் புதிய விளையாட்டுத் திடல் உள்பட 7 உட்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை ஷெனாய் நகரில் ரூ.10.56 கோடியில் பாவேந்தா் பாரதிதாசன் விளையாட்டுத் திடல்,... மேலும் பார்க்க