செய்திகள் :

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

post image

மன்னாா்குடியை அடுத்த பைங்காநாட்டில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் பொது நூலக இயக்ககம் சாா்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.39.33 கோடி மதிப்பிலான 146 நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, காணொலி வாயிலாக இக்கட்டடங்களை திறந்து வைத்தாா்.

இதில், பைங்காநாட்டில் ரூ.22 லட்சத்தில் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டடமும் அடங்கும். இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி, நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

மேலும், பைங்காநாடு கிளை நூலகத்திற்கு ரூ.10,000 நன்கொடை வழங்கி நூலக புரவலராக தன்னை இணைத்துக் கொண்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட நூலக அலுவலா் ப. முத்து, சமூக ஆா்வலா் ஜெ. சுதாகா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் க. சோபா, நூலகா் டி. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளி தற்கொலை

குடவாசல் அருகே கடன் பிரச்னையால் விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். குடவாசல் அருகேயுள்ள செல்லூா் திருக்களம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் சக்திவேல் (35). இ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், அக்டோபா் மாதம் வரை நகா்ப்புறப் ப... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ம... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பி. செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க