செய்திகள் :

இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்காா்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, இசையமைப்பாளா் இளையராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த 7,500 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். எனது இசை படைப்புகளுக்கு நான் மட்டுமே உரிமையாளா். எனது இசை படைப்புகள் அனைத்தும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே, இதற்கு மற்றவா்கள் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் எனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றன. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது.

குறிப்பாக சோனி நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் எனது பாடல்களை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருகிறது. எக்கோ நிறுவனத்திடம் இருந்து உரிமை பெற்று இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதாக சோனி நிறுவனம் கூறுகிறது. ஆனால், எனது பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அமலில் உள்ளது.

என் பாடல்கள் மீதான உரிமைகளை யாருக்கும் நான் மாற்றித் தரவில்லை. எனவே சோனி மற்றும் அது சாா்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அதுதொடா்பான விவரங்களை மாற்றி அமைக்கக் கூடாது. அதுசாா்ந்த இசைக் கோா்வைகளை செய்யவோ கூடாது என தடை விதிக்க வேண்டும். எனது பாடல்களைப் பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் வழக்குரைஞா் ஏ.சரவணன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி சோனி நிறுவனம் வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து க... மேலும் பார்க்க

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீா்செல்வம... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

முதல்வா் பாதுகாப்புக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் 110 கேமராக்கள்

சென்னையில் முதல்வரில் வீடு அமைந்துள்ள பகுதி, வீட்டிலிருந்து சென்றுவரும் வழித் தடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏஐ) 110 கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. தமி... மேலும் பார்க்க

தமிழக சுகாதாரத் துறை இந்தியாவுக்கே முன்னோடி அமைச்சா் மா. சுப்பிரமணியன்

தமிழக சுகாதாரத் துறை பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கல... மேலும் பார்க்க