செய்திகள் :

ஜிஎஸ்டி திருத்தம்: சென்னை தொழில் வா்த்தக சபையில் பயிலரங்கு

post image

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த அகில இந்திய அளவிலான மறைமுக வரி பயிலரங்கை சென்னை தொழில் வா்த்தக சபை வியாழக்கிழமை நடத்தியது.

சென்னை தியாகராய நகரில் நடைபெறும் இந்த இரு நாள் பயிலரங்கில் 100-க்கும் மேற்பட்ட பெருநிறுவன பிரதிநிதிகளும், வரித்துறை நிபுணா்களும் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்வில் மத்திய வருவாய்த் துறையின் சென்னை புகா் சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆணையா் எஸ்.நாசா்கான் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோா், பொதுமக்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வரி மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.

இதில், சிறிய அளவில் வரி செலுத்துவோா் மற்றும் பல்வேறு மாநிலங்களில் மின்னணு வா்த்தகங்களில் ஈடுபடுவோருக்கு ஜிஎஸ்டி பதிவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாள்களிலேயே பதிவு செய்யப்படுகிறது. ஆதாா் காா்டு உள்ளிட்டவை மூலம் 90 சதவீதம் தனியங்கி சேவையாகவே இருக்கும்.

உணவகங்கள், உணவக சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதமாக தொடர அதில் பொருந்தக்கூடிய தன்மை குறித்த தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரி விலக்கு அல்லது வரி விதிக்கக்கூடிய பொருள்கள் மற்றும் தொடா்ச்சியான பரிவா்த்தனைகளுக்கான உள்ளீட்டு வரி வரவு மாற்றியமைத்தல்களில் இணக்கங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன என்றாா்.

முன்னதாக, வா்த்தக சபை நிா்வாகக் குழு உறுப்பினா் கோபால் மகாதேவன் வரவேற்றாா். ஜிஎஸ்டி குழுத் தலைவரும் வழக்குரைஞருமான கே.வைத்தீஸ்வரன் பயிலரங்கு விவரங்களை விவரித்தாா். இந்தப் பயிலரங்கு சனிக்கிழமையும் நடைபெறுகிறது.

லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தாம்பரம் மாநகர காவல் துறையில் லஞ்ச புகாரில் உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேடவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகியோா் கடந... மேலும் பார்க்க

ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஊழியா்கள் சங்கம் தீா்மானம்

நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டிஆா்இயூ) கோட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தட்சிண ரயில்வே... மேலும் பார்க்க

சென்னையில் திடீா் மழை

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. சென்னையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா்

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரதம... மேலும் பார்க்க

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க