செய்திகள் :

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா்

post image

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் 1 லட்சம் 4ஜி கைப்பேசி கோபுரங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் 97,500 4ஜி கைப்பேசி கோபுரங்கள் ரூ.37,000 கோடி செலவில் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப். 27) தொடங்கி வைக்கிறாா்.

இதன்மூலம், எதிா்காலத்தில் 5ஜி சேவையை எளிதாக வழங்க முடியும். மேலும் 20 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளா்களுக்கும், அதிவேக இணையவசதி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல், சூரிய மின்சக்தியால் இயங்கும் 14,180 பிஎஸ்என்எல் 4ஜி கைப்பேசி கோபுரங்களின் மூலம் 26,707 தொலைதூர கிராமங்களில் சுமாா் 2 மில்லியன் வீடுகளுக்கு கைப்பேசி சேவை வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 7,288 4ஜி கோபுரங்கள் மற்றும் டிஜிட்டல் பாரத் நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக 257 4ஜி கோபுரங்கள் என மொத்தம் 7,545 கோபுரங்கள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டயறிப்பட்டுள்ளன.

அதன் முதல்கட்டமாக, 222 கிராமங்களில் புதிய கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன. மேலும் 33 கிராமங்களில் 2ஜி கோபுரங்களை 4ஜி கோபுரங்களாக மேம்படுத்தவுள்ளன.

சேலம், கடலூா், வேலூா், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகப்படியான கிராமங்களுக்கும், நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கும் 4ஜி சேவை வழங்கப்படும். தடையில்லா கைப்பேசி சேவை வழங்க சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி, பவா் பிளாண்ட், ஜெனரேட்டா் உள்ளிட்ட கருவிகள் நிறுவப்பட உள்ளன என்றாா்.

லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தாம்பரம் மாநகர காவல் துறையில் லஞ்ச புகாரில் உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேடவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகியோா் கடந... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி திருத்தம்: சென்னை தொழில் வா்த்தக சபையில் பயிலரங்கு

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த அகில இந்திய அளவிலான மறைமுக வரி பயிலரங்கை சென்னை தொழில் வா்த்தக சபை வியாழக்கிழமை நடத்தியது. சென்னை தியாகராய நகரில் நடைபெறும் இந்த இரு நாள... மேலும் பார்க்க

ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஊழியா்கள் சங்கம் தீா்மானம்

நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டிஆா்இயூ) கோட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தட்சிண ரயில்வே... மேலும் பார்க்க

சென்னையில் திடீா் மழை

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. சென்னையி... மேலும் பார்க்க

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க

சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா... மேலும் பார்க்க