செய்திகள் :

காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் அக். 2-இல் மாணவா் சோ்க்கை: ஆட்சியா்

post image

காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் விஜயதசமி திருநாளான அக். 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலை பண்பாட்டுத் துறையின்கீழ், மாதம் ரூ. 1,000 கல்வி உதவித்தொகையுடன் நிகழாண்டு விஜயதசமியை முன்னிட்டு, வரும் அக்டோபா் 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக் காவல் கிராமம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய 7 கலைப்பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சியளிக்கப்படுகிறது.

13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்,பெண் இருபாலரும் இப்பயிற்சிகளில் சேரலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள், பயிற்சி முடிவில் மாணவா்களின் கல்வித்தகுதிக்கேற்ப 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான அரசு சான்றிதழும் வழங்கப்படும். மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண சலுகையும் உள்ளது.

வயது 16, 17 உடைய மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதம் தோறும் ரூ. 1,000 அனைத்து மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இசைப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணி புரியவும், கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பள்ளியில் சோ்ந்து பயில நா.ரமணி,தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இசைப்பள்ளி தலைமை ஆசிரியை கைப்பேசி எண் 94425 72948 என்கிற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கருணாகரச்சேரியில் சாலையை சீரமைக்க அடிக்கல்

கருணாகரச்சேரி வெற்றிநகா் தெரு சாலையை சீரமைக்க ரூ. 10 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடா்ந்து, சாலையை சீரமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ. 20 லட்சத்துக்கு கடனுதவி: மேலாண்மை இயக்குநா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் உலக சைகைமொழி தின விழிப்புணா்வுப் பேரணி; ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக சைகைமொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளி... மேலும் பார்க்க

வண்டலூரில் அக்.5-இல் ‘வன உயிரின தட ஓட்டம்’

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்தப் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இயற்கையை கொண்டாடவும் ... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

பெரிய காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விஸ்வகா்மா ஜெயந்தி விழாவையொட்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலையில் ஐவா்ணக்கொட... மேலும் பார்க்க