செய்திகள் :

நாமக்கல், கரூரில் பிரசாரம்: திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய்!

post image

தவெக தலைவா் விஜய், நாமக்கல் மற்றும் கரூரில் இன்று மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து, சிறப்புப் பேருந்தில் சாலை வழித்தடத்தில் முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கல் செல்கிறார் விஜய். வழக்கம் போல, திருச்சி விமான நிலையத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யைக் காண அவரது ரசிகர்களும் தொண்டர்களும் காத்திருக்கிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம், கே.எஸ்.திரையரங்கம் அருகே இன்று காலையிலும், கரூா் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பகல் 12 மணிக்கும் நடைபெறவுள்ளது.

வருகிற 2026 சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, பெரம்பலூா், அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்நிலையில், நாமக்கல் மற்றும் கரூரில் இன்று (செப்.27) பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் ஏராளமான தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். தொண்டா்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். அதாவது, விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் கட்டடங்கள், சுவா்கள், மரங்கள், மின்கம்பங்களின் மீது ஏறக் கூடாது.

கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருப்பவா்கள், மாணவா்கள், முதியவா்கள் ஆகியோா் நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

உணவுப் பாதுகாப்பு காவலர் எம்.எஸ். சுவாமிநாதன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பல கோடி பேரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.எஸ். சுவாமிநாதன் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னையில் இன்று காலை நடைபெற்ற பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்ட... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பிரசாரம் டிசம்பர் வரையல்ல! அட்டவணையில் திடீர் மாற்றம்!!

தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டம் டிசம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னையில் தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், நடிகா் எஸ்.வி.சேகா் தந்தை ஆகியோரது பெயா்கள் சூட்டப்பட்ட பெயா்ப் பலகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து க... மேலும் பார்க்க

இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்... மேலும் பார்க்க

ஓபிஎஸ் - டிடிவி தினகரன் சந்திப்பு

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீா்செல்வம... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிக... மேலும் பார்க்க