செய்திகள் :

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

post image

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச வீடியோ

மதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகம் ஒன்றில் மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரன் (வயது 33) என்பவர் வணிகப்பிரிவு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் சமீபத்தில் கழிவறைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து ராஜராஜேஸ்வரன் சென்றுள்ளார். பின்பு அந்தப் பெண் ஊழியர் கழிவறையில் இருப்பதை ஜன்னல் வழியாகத் தன்னுடைய மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

இதைப் பார்த்துவிட்ட அந்தப் பெண் ஊழியர் கூச்சலிட, அங்கிருந்து தப்பிய ராஜராஜேஸ்வரன், தனது இடத்தில் அமர்ந்து எதுவும் நடக்காதது போல வேலை செய்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் இதுகுறித்து சக ஊழியர்களிடமும் உயரதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.

ராஜராஜேஸ்வரன்

இதுகுறித்து மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பெயரில் ராஜராஜேஸ்வரனின் மொபைல் போனை வாங்கி சோதனை செய்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

அந்த அலுவலகத்தில் பணிபுரியும் பல பெண் ஊழியர்களை கழிவறை உள்ளிட்ட பல இடங்களில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மொபைலில் சேமித்து வைத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்ய ராஜராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மதுரை மாவட்ட மின்சார வாரிய ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

ஆசிட் வீசிய பெண்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலை... மேலும் பார்க்க

சென்னை: கலெக்ஷன் ஏஜென்ட்டிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி; ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளைஞர்களுக்கு சிறை

சென்னை, சின்மையா நகர், வேதா நகரில் வசித்து வருபவர் நாரயணன் (35). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் சாந்தகுமார் என்பவரிடம் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். கோயம்பேடு மற்றும... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகள... மேலும் பார்க்க

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது

கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கோவை அங்... மேலும் பார்க்க