செய்திகள் :

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகளை வேட்டையாடுவதற்கும் கள்ளத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி விலங்குகள் வேட்டைக்காக சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகள், அவ்வப்போது மனித உயிர்களையும் காவு வாங்கி விடுகின்றன. அதையடுத்து போலீஸார் அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்து, கள்ளத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்வார்கள்.

ஆனாலும் கல்வராயன் மலையில் நடைபெறும் கள்ளத்துப்பாக்கி கலாசாரத்தை போலீஸாரால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படியான சூழலில்தான் தற்போது மேலும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

பிரகாஷ்
பிரகாஷ்

கல்வராயன் மலை மேல் மதூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், வீட்டுக்கு வந்த தன்னுடைய மருமகனுக்கு கோழிக் கறி விருந்து வைக்க முடிவெடுத்தார்.

அதற்காக தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால், வீட்டின் பின் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியைக் குறிவைத்து சுட்டிருக்கிறார். ஆனால் குறி தவறிய அந்த துப்பாக்கிக் குண்டு, பக்கத்தில் வீட்டில் இருந்த பிரகாஷ் என்பவரின் தலையைத் துளைத்தது.

அதனால் அதே இடத்தில் சுருண்டு விழுந்த பிரகாஷ், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் கரியாலூர் போலீஸார், அண்ணாமலையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள்... மேலும் பார்க்க

கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது

கோவை சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே சூலூரைச் சேர்ந்த அருண்குமார் (38). இவர் கபடி மற்றும் கைப்பந்து போட்டிகளுக்கான பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.கோவை அங்... மேலும் பார்க்க

கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?

கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்கிற பெயரில் ஓர் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. அங்குப் பெற்றோர் இல்லாத சுமார் 26 குழந்தைகளைப் பராமரிப்பதாக... மேலும் பார்க்க

சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடிகரின் பின்னணி!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுமதி (பெயர் மாற்றம்). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட, மாமியார், இரண்டு மகன்களுடன் வசித்து வ... மேலும் பார்க்க

குடியாத்தம் குழந்தை கடத்தல் விவகாரம்; 2 இளைஞர்கள் கைது - பணம் பறிக்கத் திட்டமிட்டு துணிகரம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரின் மனைவி ஜனனீ (28). இவர்களது மூன்றரை வயது குழந்தை யோகேஷ், நேற்று மதியம் 12.20 மணியளவில் மர்ம நபர்கள... மேலும் பார்க்க

சட்டவிரோத மண் விற்பனை: ”நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்”- முதல்வர் பாராட்டிய நிமல் ராகவன் ஆதங்கம்!

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பண... மேலும் பார்க்க