செய்திகள் :

`இந்திய மருந்துகளுக்கு 100% வரி' - தொடரும் ட்ரம்பின் வரி வெறி! - யாருக்கு நஷ்டம்?

post image

`இந்தியா மீது அபராதம்' - ட்ரம்ப்

உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக தொடர்ந்து பேசிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தப் போருக்கு முக்கிய காரணம் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதுதான் என்கிறார்.

அதனால், இந்தியா மீது அபராதம் விதிப்பதாகத் தெரிவித்த அதிபர் ட்ரம்ப், இந்தியப் பொருள்கள் மீது 50 சதவிகிதம் வரை வரி விதித்தார். இந்த வரி கடந்த மாதத்திலிருந்து செயல்பாட்டில் இருக்கிறது.

இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் நேற்று, அக்டோபர் 1, 2025 முதல் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரை வரி விதிப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்தியா | ட்ரம்ப் வரி
இந்தியா | ட்ரம்ப் வரி

மருந்து தயாரிப்புக்கும் 100% வரி

இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``அக்டோபர் 1, 2025 முதல், எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100 சதவீத வரியை விதிக்கப் போகிறோம்.

அமெரிக்காவில் மருந்து நிறுவனத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டிருந்தால், இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னர், `இந்த வரி விதிப்பின் மூலம், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அதே வேளையில் அரசாங்கத்தின் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வரிகள் உதவும்' எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

பாதிப்பு யாருக்கு?

மருந்துப் பொருட்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தை அமெரிக்கா.

2024 நிதியாண்டில், இந்தியாவின் 27.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்து ஏற்றுமதியில், 31 சதவீதம் அல்லது 8.7 பில்லியன் டாலர் (ரூ.7,72,31 கோடி) அமெரிக்காவிற்குச் சென்றதாக இந்திய மருந்து ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3.7 பில்லியன் டாலர் (ரூ.32,505 கோடி) மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ட்ரம்ப்
ட்ரம்ப்

மேலும், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஜெனரிக் மருந்துகளில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும், பயோசிமிலர் மருந்துகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமானவற்றையும் இந்தியாதான் ஏற்றுமதி செய்கிறது.

டாக்டர் ரெட்டீஸ், அரபிந்தோ பார்மா, சைடஸ் லைஃப் சயின்சஸ், சன் பார்மா மற்றும் க்ளாண்ட் பார்மா போன்ற நிறுவனங்கள் அமெரிக்க சந்தையிலிருந்து தங்கள் மொத்த வருவாயில் 30-50 சதவீதத்தை ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க நுகர்வோர் இந்தியாவில் தயாரிக்கப்படும் குறைந்த விலை ஜெனரிக் மருந்துகளையே பெரிதும் நம்பியுள்ளனர்.

எனவே, இந்திய மருந்துகள் மீதான அதிக வரிகள், அமெரிக்காவின் விலை உயர்வு, பணவீக்கம் மற்றும் மருந்து பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் எனக் கருதப்படுகிறது.

"விஜய்க்கு அரசியல் தெரியவில்லை; எம்.ஜி.ஆர் நேரடியாக அரசியலுக்கு வந்தவர் அல்ல" -SV சேகர் தாக்கு

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயண பிரசாரத்தை வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி, வாரந்தோறும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டமாகப் பிர... மேலும் பார்க்க

லடாக் போராட்டம்: நேபாளம் - லடாக் இரண்டு போராட்டமும் ஒன்றா? பின்னணி என்ன?

லடாக்கில் மாநில அந்தஸ்து உரிமை கோரி நடந்து வந்த போராட்டம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 24) வன்முறையாக வெடித்தது. இதில், போராடும் இளைஞர் குழுவுக்கும் போலீஸாருக்கும் நடந்த மோதலில் 4 பேர் பலியாகினர். போர... மேலும் பார்க்க

உபரி உத்தரப் பிரதேசம், பற்றாக்குறை தமிழ்நாடு... பாரபட்ச நிதிப் பகிர்வின் சாட்சியா சி.ஏ.ஜி அறிக்கை?

‘உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல வட இந்திய மாநிலங்களின் வருவாய், உபரியில் இருக்கின்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களின் வருவாய், பற்றாக்குறையில் இருக்கிறது’ என்று கூறியு... மேலும் பார்க்க

"இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடுதான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்"- தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புகழாரம்

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ... மேலும் பார்க்க

"ஆயிரம் ஆண்டுகளாக சாதி எனும் சதியால் நமக்கான கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் `கல்வியில் சிறந்த தமிழ்நாடு' நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 25) மாலை தொடங்கியது.இதில், முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திமுக அமைச்சர்கள், மாணவ... மேலும் பார்க்க

``கல்வியில் ஆரிய திராவிட கருத்தியல்" - இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா பேச்சு!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மேலும், துணை ம... மேலும் பார்க்க