செய்திகள் :

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும்நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், சர்வதேச உலக ஒழுங்கை டிரம்ப் மதிப்பதாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டொனால்ட் டிரம்ப்

இருப்பினும், டிரம்ப்பின் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் ஒரு மனிதாபிமான அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என்றும் அவர்கள் கூறினர்.

ஐநா அகதிகள் நிறுவனம், ஐநா அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR), குழந்தைகளுக்கான ஐநா அமைப்பு, ஐநா சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியம் (UNICEF), செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors without Borders) உள்ளிட்ட அமைப்புகளைக் குறிப்பதாகத் தெரிகிறது.

காஸாவுடனான போரில் இஸ்ரேலுக்கு டிரம்ப்பின் ஆதரவையும், உக்ரைனுடனான போரில் ரஷியாவுடன் டிரம்ப்பின் பேச்சுவார்த்தை முயற்சியையும் குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர் அஸ்லே ஸ்வீன், ``அமைதிக்கான நோபலை பெற டிரம்ப்புக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை’’ என்று தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டது, நட்பு மற்றும் கூட்டாளி நாடுகளுடனான வர்த்தகப் போரைக் குறிப்பிட்ட ஒஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனமும், டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் குறித்து எதிர்மறையாகவே பதிலளித்தது.

இந்தியா - பாகிஸ்தான் போரையும் நிறுத்தியதாக டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தாலும், அதனை இந்தியா தரப்பில் இருந்து தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், டிரம்ப்புக்கு நோபல் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க:ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

Why Nobel Experts Aren't Betting On Trump For This Year's Peace Prize

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்த... மேலும் பார்க்க

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்... மேலும் பார்க்க

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வெளிநாட்டு பர்னிச்சருக்கு 30 சதவிகிதமும், கனரக லாரிகளுக்கு 2... மேலும் பார்க்க

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு வி... மேலும் பார்க்க

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்... மேலும் பார்க்க