செய்திகள் :

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

post image

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்பர் 25) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஷகிப் அல் ஹசன் சாதனை முறியடிப்பு

வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

அந்தப் போட்டியில் வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் விக்கெட்டினைக் கைப்பற்றினார். சர்வதேச டி20 போட்டிகளில் முஸ்தஃபிசூர் ரஹ்மானின் 150-வது விக்கெட் இதுவாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் முஸ்தஃபிசூர் 150 விக்கெட்டுகளைக் கடந்து சாதனை படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளைக் கடந்தது மட்டுமின்றி, வங்கதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

இதற்கு முன்பாக, வங்கதேச அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வீரர்கள் வரிசையில் ரஷித் கான் (173 விக்கெட்டுகள்), டிம் சௌதிக்கு (164 விக்கெட்டுகள்) அடுத்தபடியாக 151 விக்கெட்டுகளுடன் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Bangladesh teammate Mustafizur Rahman has broken Shakib Al Hasan's record in T20 Internationals.

இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? வங்கதேசப் பயிற்சியாளர் விளக்கம்!

சூப்பர் 4 சுற்று கடைசிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சூற்றின் கடைசிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி... மேலும் பார்க்க

அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் கௌர்!

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம... மேலும் பார்க்க

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூ... மேலும் பார்க்க

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? வங்கதேசப் பயிற்சியாளர் விளக்கம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.ஆசிய கோப்பை கி... மேலும் பார்க்க