செய்திகள் :

பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?

post image

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.

தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அவதானிப்பு எனவும் கைஃப் கூறியுள்ளார்.

என்ன பிரச்னை?

ஆசிய கோப்பையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்துவீச்சு சுமாராகவே இருக்கிறது. இதனைக் குறிப்பிட்டு கடந்த வியாழக் கிழமை முகமது கைஃப் ஒரு பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், “பொதுவாக ரோஹித் சர்மா தலைமையில் பும்ராவுக்கு 1,13, 17, 19-ஆவது ஓவர்கள்தான் பந்து வீசுவார். ஆனால், ஆசிய கோப்பையில் சூர்யகுமார் தலைமையில் பும்ராவுக்கு தொடர்ச்சியாக 3 ஓவர்கள் அளிக்கப்படுகிறது.

காயத்தைத் தவிர்க்க வேண்டுமானால் அவரது உடல் நன்றாக வார்ம்-அப் ஆன பிறகு பந்துவீச வேண்டும்.

14 ஓவர்களில் 1 ஓவர் மட்டுமே பும்ரா இருப்பார் என்ற நிலை பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிடுகிறது. உலகக் கோப்பையில் இது இந்தியாவை மேலும் பாதிக்கும்” என்றார்.

பும்ராவின் பதிலடியும் கைஃப்-இன் விளக்கமும்

இதற்கு பும்ரா, “மீண்டும் தவறான கருத்து” எனக் கூறியிருந்தார். பும்ராவின் இந்தப் பதிலுக்கு மீண்டும் கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.

கைஃபின் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

உங்களது நலம் விரும்பியும் உங்களைப் பிடித்தவரும் ஆகிய என்னுடைய இந்தக் கருத்தை கிரிக்கெட்டின் நீண்ட கால அவதானிப்பினால் வந்தது என எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் இந்தியாவுக்கு போட்டியை வென்றுதரும் மிகப்பெரிய வெற்றியாளர்.

இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்ட களத்தில் விளையாடும்போது எவ்வளவு உழைப்பைக் கொடுக்க வேண்டும் என எனக்கும் தெரியும் என்றார்.

Former Indian player Mohammad Kaif has given an explanation for the comments made by Indian fast bowler Bumrah.

பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு 30% அபராதம்

பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தமைக்காக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்று கடைசிப் போட்டி: இந்தியா பேட்டிங்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சூற்றின் கடைசிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி... மேலும் பார்க்க

அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் கௌர்!

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம... மேலும் பார்க்க

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூ... மேலும் பார்க்க

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்... மேலும் பார்க்க