செய்திகள் :

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!

post image

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள், அசாம் அரசின் சார்பில் நடைபெறும் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா அறிவித்துள்ளார்.

பிரபல அசாமிய பாடகர் ஸுபீன் கர்க், கடந்த செப்.19 ஆம் தேதி சிங்கப்பூரில் ஆழ்கடல் சாகசத்தில் ஈடுபட்டபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அசாம் கொண்டு வரப்பட்ட அவரது உடல், குவாஹட்டி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில் ஸுபீன் கர்க்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பாடகர் ஸுபீன் கர்க்கின் பூர்வீக வீடு அமைந்துள்ள ஜோர்ஹாட் நகரத்தில் அவரது 13 ஆம் நாள் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு அவருக்கு நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா, பாடகர் ஸுபீன் கர்க்கின் 13 ஆம் நாள் வேத சடங்குகள் ஜோர்ஹாட்டில் நடைபெறும் எனவும், அங்கு அவரது அஸ்தியானது கொண்டு வரப்படும் எனவும் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளார்.

இத்துடன், அதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்வதற்காக, அசாமின் கலாசார விவகாரங்கள் அமைச்சர் பிமல் போரா, ஸுபீன் கர்க்கின் மனைவி கரிமா கர்க்கை, இன்று (செப். 26) நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: லடாக் வன்முறை - ஜென் ஸீ போராட்டம் அல்ல! காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு!

Chief Minister Himanta Biswas Sharma has announced that the 13th day rituals of the late Assamese singer Zubeen Garg will be organized by the Assam government.

மழை பாதிப்பு: பிரதமர் மோடியுடன் முதல்வர் ஃபட்னாவிஸ் சந்திப்பு

தில்லியில் பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது கனமழையால் அண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் அவர் வலியுறுத்தினார். ... மேலும் பார்க்க

லடாக் வன்முறை! போராட்டத்தைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கில் வன்முறையைத் தூண்டியதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.யூனியன் பிரதேசமான லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டணையை நீட்டித்தல் தொடர்பாக, செப்டம்பர் 10 ஆம் தேதிமுதல் சம... மேலும் பார்க்க

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க