செய்திகள் :

இந்திய ராணுவம்: 1960 முதல் போர்களில் பங்கேற்ற MiG-21 விமானத்துக்கு ஓய்வு - இனி என்ன ஆகும்?

post image

இந்திய ராணுவத்துக்கு 1960 முதல் சேவையாற்றிவந்த MiG-21 ரக ஜெட் விமானங்கள் ஓய்வு பெற்றுவிட்டன.

இவை 1965 இந்தியா–பாகிஸ்தான் போர், 1971 இந்தியா–பாகிஸ்தான் போர், 1999 கார்கில் போர் மற்றும் 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய மோதலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆரம்ப காலங்களில் இந்தியாவின் முன்னணி தாக்குதல் விமானங்களாக இருந்துள்ளன.

MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்
MiG-21 ஜெட் விமானம்

சோவியத் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட இந்த விமானங்களை ஒட்டுமொத்தமாக விமானப்படையிலிருந்து நீக்கியிருக்கிறது இந்திய ராணுவம்.

 இந்திய விமானப்படையில் முக்கியமான அங்கமாக இவை மாறியதால், விமானப்படையின் திறனை அதிகரிக்க 870க்கும் மேற்பட்ட விமானங்களை இந்தியா வாங்கியிருக்கிறது. இதில் சில மாறுதல்களைச் செய்து MiG-21 பைசன் என்ற ரகத்தையும் கொண்டுள்ளது.

பைசன் ரகம் நான்காவது தலைமுறைப் போர் விமானங்களான F-16, Mirage-2000 உடன் போட்டியிடும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் சாதாரண MiG-21 இரண்டாம் தலைமுறை ஜெட் விமானங்கள், 'Dogfight' எனக் கூறப்படும் நேருக்கு நேர் சண்டையில் மட்டுமே பயன்படுத்தப்படும்.

விமானப்படையில் MiG-21 இடத்தை நிரப்பும் விமானமாக இலகுரக போர் விமானம் தேஜாஸ் இருக்கும் என்கின்றனர். தேஜாஸ் MiG-21-இன் வாரிசாக அறியப்படுகிறது. இதுபோல தூக்கி எறியப்படும் விமானங்கள் என்ன ஆகும் என்பதைக் காணலாம்.

பழைய விமானங்கள் என்ன ஆகும்?

1. டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை அருங்காட்சியகத்தில் MiG-21 விமானங்கள் பார்வைக்காக வைக்கப்படலாம். உறுதியான தகவல்கள் இல்லாவிட்டாலும் இதற்கான சாத்தியங்கள் அதிகம்.

2. இதுபோல ஓய்வுபெறும் விமானங்கள் உலகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படலாம். கல்லூரிகள், விமானப்படை நிலையங்களில் காட்சிக்காக வைக்கப்படும்.

3. MiG-21 பறக்கும் நிலையில் பேணப்பட்டு விண்டேஜ் படைகளைக் காட்சிப்படுத்தப் பயன்படுத்தப்படலாம்.

4. சிலவற்றைப் பயிற்சிக்காகப் பயன்படுத்துவர். மெக்கானிக்குகள், விமானிகள், பொறியாளர்கள் கற்க உதவும்.

5. மோசமான நிலையில் இருப்பவற்றை ஸ்கிராப் செய்து மறு பயன்பாட்டுக்குக் கொண்டுவருவர்.

GST 2.0: XUV கார் முதல் ஆக்டிவா ஸ்கூட்டர் வரை - என்ன என்ன வாகனங்களின் விலை குறைந்திருக்கிறது?

இன்று முதல் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட வரி புதிதாக வாகனம் வாங்குபவர்களுக்கு பலனளிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆரம்பநிலை ஹேட்ச்பேக்ஸ் கார்களில் 40,00... மேலும் பார்க்க

Car sunroof: இவ்வளவு ஆபத்து இருக்கு பாஸ் சன்ரூஃபில்! - காருக்கு எதுக்குங்க சன்ரூஃப்?

சமீபத்தில் ஒரு வீடியோ சோஷியல் மீடியாக்களில் செய்தியாக வந்தது. பார்க்கவே கொஞ்சம் பதைபதைப்பாக, மனசுக்குப் பாரமாக இருந்தது. பெங்களூருவில் ஒரு மஹிந்திரா காரில், சன்ரூஃபில் ஏறி நின்று கொண்டு பயணித்த சி... மேலும் பார்க்க

EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album

EV: இது எந்த அளவுக்கு சிக்கனம்னு சொன்னா அப்படியே ஷாக் ஆய்டுவிங்க!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்... அர... மேலும் பார்க்க

இந்தியாவில் கால்பதித்த மஸ்க்கின் டெஸ்லா; முதல் காரைப் பெற்றுக்கொண்ட மகாராஷ்டிரா அமைச்சர்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் ஷோரூமை கடந்த ஜூலை 15ம் தேதி திறந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் திறக்கப்பட்ட இந்த ஷோரூம் மூலம் இது வரை 600 கார்கள் முன்பதிவு செய... மேலும் பார்க்க