செய்திகள் :

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

post image

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட 11 பேரும் அடங்குவா்.

இத்துடன், 2023 அக்டோபா் முதல் காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65,419-ஆக உயா்ந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை 1,67,160 போ் காயமடைந்துள்ளனா்.

இது தவிர, இன்னும் ஆயிரக்கணக்கானோா் கட்டட இடிபாடுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு வி... மேலும் பார்க்க

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: வெனிசுலாவில் வியாழக்கிழமை நண்பகல் 12.25 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம்... மேலும் பார்க்க

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது. இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமை... மேலும் பார்க்க

22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் - வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

பிரபல ஆங்கில அகராதி தயாரிப்பு நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தங்களை மேற்கொண்டு 12-வது பதிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அகராதியில் புதிதாக petrichor, terafl... மேலும் பார்க்க

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

அமெரிக்காவில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற வழக்கில், கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலெய்ன் மிலெம் என்பவர், தன்னுடைய காதலியி... மேலும் பார்க்க

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!

கடந்த 2007ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, லிபியாவிடமிருந்து பிரசாரத்துக்கு நிதியளிக்கப்பட்ட சதி திட்டத்தை தீட்டியதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி... மேலும் பார்க்க