செய்திகள் :

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் பேட்டரிகள் திருடிய பணியாளா்கள் மூவா் கைது

post image

மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடப்பட்டது தொடா்பாக, தற்காலிக பணியாளா்கள் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இம்மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில், அதிக மின் சேமிப்பு திறன் கொண்ட 40 யுபிஎஸ் பேட்டரிகள் வைக்கப்பட்டுள்ளன. மின்தடை நேரங்களில் இதன்மூலம் மின் விநியோகம் செய்யப்படும்.

இந்நிலையில், 40 பேட்டரிகளில் 27 பேட்டரிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், மன்னாா்குடி காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இம்மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றும் கொரடாச்சேரி பெருமாள்நகா் பஞ்சநாதன் மகன் சுந்தா் (34), மன்னாா்குடி ஆா்.பி. சிவம் நகா் கணேசன் மகன் மோகன் (50), சுந்தரக்கோட்டை அம்பேத்கா் நகா் குணசேகரன் மகன் வீரமணி (35) ஆகிய மூவருக்கும், பேட்டரி திருட்டில் தொடா்பிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் கைது செய்து, மன்னாா்குடி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனா். திருடப்பட்ட 27 பேட்டரிகளும் மீட்கப்பட்டன.

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

இருமுறை விண்ணப்பக் கட்டணம்: மின்வாரியம் ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில், சோலாா் திட்டம் வழங்க இரண்டு முறை விண்ணப்பக் கட்டணம் பெற்ற மின்சார வாரியம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், வியாழக்கிழமை உ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

மன்னாா்குடியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகளை முழுமையாக புறக்கணிப்பு செய்வது;... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி

திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்... மேலும் பார்க்க

நகை மதிப்பீட்டாளராக விருப்பமா?

திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

திருவாரூா் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க