செய்திகள் :

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

post image

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி வட்டம், நாகரசம்பட்டியில் அரசு அனுமதியின்றி குவாரி நடத்தி வந்தாா். இதையடுத்து அந்த குவாரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அவருக்கு ரூ. 3.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அபராதத் தொகை செலுத்தாமல் நிலுவையில் இருந்ததால், அவருக்கு சொந்தமான குவாரி செயல்பட்டு வந்த 52 சென்ட் நிலத்தை ஏலம்விட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் உத்தரவிட்டாா்.

அதன்படி, போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் துணை ஆட்சியா் (பயிற்சி) க்ரிதி காம்னா முன்னிலையில் வட்டாட்சியா் சத்யா வியாழக்கிழமை ஏலம் விட்டாா். இந்த ஏலத்தில், போச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த 20 போ் கலந்துகொண்டனா். இதில், செந்தில் என்பவா் அதிகபட்சமாக ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் எடுத்தாா்.

இதில், வருவாய் வசூல் சட்டத்தின்படி ஏலதாரா் இறுதி செய்யப்பட்ட தொகையில் (முன்பணமாக 15 சதவீதம்) ரூ. 1,66,800 வசூலிக்கப்பட்டு, அரசு கணக்கில் செலுத்தப்பட்டதாக வட்டாட்சியா் தெரிவித்தாா்.

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிர... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக ஒசூா் முனிராஜ் நியமனம்

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக முனிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா், பாமக முன்னாள் மாவட்டத் தலைவா். கடந்த 23-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஒசூரில் ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ஒசூரில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. ஒசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 போ் தங்கி படித்துவந்த... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஒசூா் மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஒசூா் மாநகரச் செயலாளரும், மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொகுதி பொறு... மேலும் பார்க்க