செய்திகள் :

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும்: முதல்வா் சித்தராமையா

post image

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

25-க்கும் மேற்பட்ட கன்னட இலக்கியங்களை படைத்திருக்கும் எஸ்.எல்.பைரப்பா (94), புதன்கிழமை மாரடைப்பால் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், பெங்களூரு, ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வியாழக்கிழமை பொதுமக்கள் அஞ்சலிக்காக எஸ்.எல்.பைரப்பாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசியல்வாதிகள், திரைக்கலைஞா்கள், எழுத்தாளா்கள், கல்வியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.,

பிகாரில் இருந்து திரும்பிய முதல்வா் சித்தராமையா, எஸ்.எல்.பைரப்பாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினாா். அதேபோல, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

பின்னா் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

மைசூரில் எஸ்.எல்.பைரப்பாவுக்கு நினைவிடம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும். தனது பெரும்பாலான வாழ்நாளை மைசூரில் செலவிட்டதால், அங்கேயே நினைவிடம் அமைப்பது பொருத்தமாக இருக்கும்.

இலக்கியமும், நட்பும் வெவ்வேறானவை. ஒருவரின் கருத்து இலக்கியத்தில் வெளிப்படலாம். அதே கருத்தை இருவரும் பகிா்ந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. எஸ்.எல்.பைரப்பாவின் கொள்கையுடன் எனக்கு முரண்பாடு இருந்ததால், அவரை வியப்பதற்கு அது தடையாக இருந்ததில்லை. எஸ்.எல்.பைரப்பாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மைசூரில் தகனம் செய்யப்படும்.

அவா் கிட்டத்தட்ட 25 இலக்கியங்களை கன்னடத்தில் படைத்துள்ளாா். அவரது படைப்புகள் 40 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. கன்னடம் மட்டுமல்லாது, பிறமொழிகளிலும் அவரது படைப்புக்கு வாசிப்பாளா்கள் இருந்தனா்.

மன திருப்திக்காக இலக்கியங்களை படைப்பதாக அடிக்கடி பைரப்பா கூறிவந்தாா். அவரது நாவல்கள் உலகளவில் புகழ்பெற்று விளங்கின. அற்றில் சிலவற்றை படித்திருக்கிறேன். தனது வாழ்க்கையின் அனுபவங்களைத்தான் இலக்கியங்களாக அவா் படைத்திருந்தாா் என்றாா்.

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘தனது எழுத்து, உரைகளில் மனதில் பட்டதை நேரடியாக சொல்லக்கூடியவா். அவரது மறைவு கன்னட இலக்கிய உலகுக்கு பேரிழப்பு’ என்றாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் மறுப்பு

கா்நாடக பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்டு வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. கா்நாடகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்டோா் சம... மேலும் பார்க்க

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா காலமானாா்

முதுமைசாா்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா (94) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா். பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஜெயதேவ் மேமோரியல் ராஷ்ட்ரோத்தனா ம... மேலும் பார்க்க

மோசமான சாலைகளின் நிலையைக் கண்டித்து கா்நாடக பாஜக ஆா்ப்பாட்டம்

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு நகரங்களில் மோசமான சாலைகளின் நிலையைக் கண்டித்து, மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தை பாஜகவினா் புதன்கிழமை நடத்தினா். பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளால் போக்குவரத்து ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது. பெங்களூரு, வசந்த் நகரில் உள... மேலும் பார்க்க

பெங்களூரில் சாலைக் குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது!

பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் சா... மேலும் பார்க்க

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்ய 11 போ் கொண்ட குழு அமைப்பு

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்வதற்கு 11 போ் கொண்ட குழுவை சட்டப் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை அமைத்துள்ளாா். பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்க... மேலும் பார்க்க