செய்திகள் :

41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவதென்ன?

post image

ஆசியக் கோப்பைத் தொடரில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுடன் முதல்முறையாக இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், நேற்றைய போட்டியில் இரண்டாவது அணியாக வங்கதேசத்துடன் மோதிய பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே செப்.14 ஆம் தேதி லீக் சுற்றிலும், அதனைத் தொடர்ந்து செப்.21 ஆம் தேதி சூப்பர் 4 சுற்றிலும் மோதியிருந்தன.

இரண்டு போட்டிகளிலும் முறையே இந்திய அணி 7 மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் வருகிற செப்.28 ஆம் தேதி இவ்விரு அணிகளும் கோப்பைக்கான போட்டியில் விளையாடவுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறும்போது, “நாங்கள் 14 ஆம் தேதியும், 21 ஆம் தேதியும் விளையாடியதை நன்றாக அறிவோம். ஆனால், இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டியது மிகவும் முக்கியமானது.

நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். இந்த வாய்ப்புக்கு நாங்கள் தகுதியானவர்கள். அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்.

இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சித்ததாகவே கருதுகிறேன். நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் வீரர்கள் ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரௌப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த மைக், “நாங்கள் விளையாட்டின் பக்கத்தில் இருந்து பார்க்க விரும்புகிறோம். முக்கியமான ஆட்டத்தில் வீரர்கள் ஆர்வ மிகுதியுடன் இருப்பார்கள்.

என்னைவிட உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு சிறந்த விளையாட்டைக் காண்பிப்பதுதான் எங்கள் வேலை” எனத் தெரிவித்தார்.

Only result will matter: Pakistan head coach Hesson on Asia Cup finale against India

இதையும் படிக்க... மீண்டும் நியூசிலாந்து அணியுடன் இணைந்த பயிற்சியாளர்! பதவி விலகிய 4 மாதங்களில்..!

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்... மேலும் பார்க்க

பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? வங்கதேசப் பயிற்சியாளர் விளக்கம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.ஆசிய கோப்பை கி... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா?

ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஆசியக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 ... மேலும் பார்க்க

மீண்டும் நியூசிலாந்து அணியுடன் இணைந்த பயிற்சியாளர்! பதவி விலகிய 4 மாதங்களில்..!

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் விலகிய கேரி ஸ்டெட், உயர் செயல்திறன் பயிற்சியாளராக மீண்டும் அணியில் இணைந்துள்ளார். நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந... மேலும் பார்க்க