செய்திகள் :

அதிபர் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவத் தலைமைத் தளபதி சந்திப்பு!

post image

பாகிஸ்தானின் பிரதமர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகியோர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேற்று (செப். 25) வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து உரையாடினர்.

இந்தச் சந்திப்பில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அதிபர் டிரம்ப் உதவியதாகக் கூறிய பிரதமர் ஷரீஃப், அவரை அமைதிக்கான மனிதர் எனக் குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார். மேலும், இருநாடுகளின் தலைவர்களும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில், அமெரிக்க அதிபரை வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் சந்தித்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். இறுதியாக, 2019 ஆம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்தார்.

அதன்பின்னர், அதிபர் ஜோ பைடன் பதவிக்காலத்தில் பாகிஸ்தானுடனான உறவுகளை, அமெரிக்க அரசு முற்றிலும் புறக்கணித்து வந்தது. ஆனால், ஜனவரி மாதம் மீண்டும் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், பாகிஸ்தானுடனான உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

Pakistani Prime Minister Shahbaz Sharif and the Army Chief met and spoke with President Donald Trump in person at the White House.

யேமன் தலைநகரின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்! 9 பேர் பலி!

யேமன் தலைநகர் சனா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 9 பேர் கொல்லப்பட்டதாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் எயிலாட் நகரத்தின் மீது, கடந்த செப்.24 ஆம் தேதி ஹவுதிகள் நடத்த... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு இல்லையா? ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.வருகிற அக்டோபர் 10 ஆம் தேதியில் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், உலக நாடுகளுக்க... மேலும் பார்க்க

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்... மேலும் பார்க்க

இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

தேடுபொறி தளமான கூகுள், ஒன்றைத் தேடும்போது, எதைக் கேட்கிறார்கள் என்பதை எவ்வாறு புரிந்துகொண்டு முடிவுகளை அளிக்கிறது என்ற கேள்வி எழுந்தால், அதன் பின்னால் வெறும் தொழில்நுட்பம்தான் இருக்கிறதா? அல்லது யாரேன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் மருந்துகள் இறக்குமதிக்கு 100% வரி! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மருந்துகளுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.மேலும், வெளிநாட்டு பர்னிச்சருக்கு 30 சதவிகிதமும், கனரக லாரிகளுக்கு 2... மேலும் பார்க்க

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு வி... மேலும் பார்க்க