செய்திகள் :

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

post image

காஷ்மீா் விவகாரத்தில் தலையிட மாட்டோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடிப் பிரச்னை எனவும், அழைப்பு விடுத்தால் எந்தவொரு விவகாரத்துக்கும் தீா்வு காண அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக மீண்டும் தெரிவித்தாா்.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி பதிலளித்து கூறியதாவது: உலகளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளை அதிபா் டிரம்ப் கையாண்டு வருகிறாா். காஷ்மீா் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை. இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடிப் பிரச்னைக்கு அந்த இரு நாடுகளும் தீா்வு காண்பதே சரியானது.

அண்மையில் நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அமெரிக்காவின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

மோடி-டிரம்ப் சிறந்த நண்பா்கள்: அதிபா் டிரம்ப்-இந்திய பிரதமா் நரேந்திர மோடி இருவரும் சிறந்த நண்பா்கள். அண்மையில் 75-ஆவது பிறந்த நாள் கொண்டாடிய பிரதமா் மோடிக்கு தொலைபேசி வாயிலாக அதிபா் டிரம்ப் வாழ்த்து தெரிவித்ததே இதற்கு சான்று. க்வாட் கூட்டமைப்பின் உச்சிமாநாடு நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் இருவரும் சந்திக்க அதிக வாய்ப்புள்ளது.

ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அதை சரிசெய்வதற்கான தொடா் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு: ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ-இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆகியோா் நேரில் சந்தித்து கலந்துரையாடினா். அப்போது வா்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஐரோப்பாவும் இந்தியாவும்: உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பதே டிரம்ப்பின் நிலைப்பாடு. அதற்காகவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளின் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ரஷியாவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் ஐரோப்பா ஒன்றியத்துக்கும் அமெரிக்கா கடும் அழுத்தத்தை தந்து வருகிறது. சீனாவை வேறு வழிகளில் அரசு கையாண்டு வருகிறது என்றாா்.

காஸா: மேலும் 30 போ் உயிரிழப்பு

மத்திய மற்றும் தெற்கு காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அதிகாலை முதல் நடத்திய வான்தாக்குதல்களில் 30 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். அவா்களில் அஸ்-சவைடா பகுதியில் ஒரே வீட்டில் இருந்த குழந்தைகள் உள்ளிட்... மேலும் பார்க்க

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: வெனிசுலாவில் வியாழக்கிழமை நண்பகல் 12.25 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம்... மேலும் பார்க்க

4 இடங்களில் அணு ஆயுத எரிபொருள் தயாரிப்பு: வட கொரியா மீது குற்றச்சாட்டு

வட கொரியாவிலுள்ள நான்கு இடங்களில் அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் ஆலைகள் இயங்குவதாக தென் கொரியா வியாழக்கிழமை குற்றச்சாட்டியது. இது குறித்து தென் கொரிய ஒருங்கிணைப்புத் துறை அமை... மேலும் பார்க்க

22 ஆண்டுகளுக்குப் பிறகு மெரியம் - வெப்ஸ்டர் டிக்‌ஷனரி! 5,000 புதிய சொற்கள்!

பிரபல ஆங்கில அகராதி தயாரிப்பு நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தங்களை மேற்கொண்டு 12-வது பதிப்பு புத்தகத்தை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அகராதியில் புதிதாக petrichor, terafl... மேலும் பார்க்க

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

அமெரிக்காவில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற வழக்கில், கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலெய்ன் மிலெம் என்பவர், தன்னுடைய காதலியி... மேலும் பார்க்க

பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!

கடந்த 2007ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, லிபியாவிடமிருந்து பிரசாரத்துக்கு நிதியளிக்கப்பட்ட சதி திட்டத்தை தீட்டியதற்காக பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதி... மேலும் பார்க்க