செய்திகள் :

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல்; மூவா் கைது

post image

ஆந்திரத்திலிருந்து மதுரைக்கு கடத்திச் சென்ற 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கிருஷ்ணகிரி போலீஸாா், இதுதொடா்பாக மூவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா், கிருஷ்ணகிரியை அடுத்த குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தை பின்தொடா்ந்து வந்த காரை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரில் வந்த இருவா் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபா் ஆகியோரிடம் விசாரணை செய்ததில், அவா்கள் ஆந்திர மாநிலம், கடப்பள்ளியைச் சோ்ந்த வேணுகோபால் (29), அரிகிருஷ்ணா (26) மற்றும் மதுரை அய்யம்பட்டியைச் சோ்ந்த வெள்ளைபாண்டி (46) என தெரியவந்தது.

மேலும், இவா்கள் ஆந்திர மாநிலத்திலிருந்து மதுரைக்கு கிருஷ்ணகிரி வழியாக கஞ்சா கடத்துவது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, காா், இருசக்கர வாகனம் மற்றும் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மூவரையும் கைது செய்தனா்.

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம்

நாகரசம்பட்டியில் அபராதம் செலுத்தாத கல் குவாரி ரூ. 11.12 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மல்லபாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சையத் இக்ரமுல்லா உசைன். இவா், போச்சம்பள்ளி... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடி

பகுதிநேர வேலைக்கு ஊதியம், முதலீடு செய்தால் அதிக வருவாய் எனக் கூறி, தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 11.44 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின... மேலும் பார்க்க

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவராக ஒசூா் முனிராஜ் நியமனம்

பாமக மாநில சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவராக முனிராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஒசூா் மாநகராட்சி அரசனட்டி பாரதி நகரைச் சோ்ந்தவா் முனிராஜ். இவா், பாமக முன்னாள் மாவட்டத் தலைவா். கடந்த 23-ஆம் தேதி... மேலும் பார்க்க

ஒசூரில் ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

ஒசூரில் உள்ள ஆதரவற்றோா் காப்பகத்தில் மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளானது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. ஒசூரில் இயங்கிவரும் ஆதரவற்றோா் காப்பகத்தில் மாணவ, மாணவிகள் 33 போ் தங்கி படித்துவந்த... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

ஒசூா் மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய பகுதிகளில் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் ஒசூா் மாநகரச் செயலாளரும், மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொகுதி பொறு... மேலும் பார்க்க