செய்திகள் :

நடிகர்களை அழைத்து வந்து விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு: நயினார் நாகேந்திரன்

post image

நடிகர்களை அழைத்து வந்து தமிழக அரசு விளம்பரம் தேடுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில், பாஜகவின் புதிய பிரிவு மற்றும் அணி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டது. கல்வியில் சிறந்த, கம்பன் பிறந்த தமிழ்நாடு இன்று பின்தங்கியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, சுய விளம்பரத்திற்காக அரசு விழாக்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் புத்தகப் பையில் அருவாளை எடுத்துச் செல்லும் அவலச் சூழல் நிலவுகிறது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க, உயர்கல்வியில் சில இடங்களை மட்டும் நிரப்பிவிட்டு, நடிகர்களை அழைத்து வந்து அரசு விளம்பரம் தேடுகிறது.

முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாகக் கூறுகிறார். இதுகுறித்து நான் தொடர்ந்து வெள்ளை அறிக்கை கேட்டு வருகிறேன்; இதுவரை பதில் இல்லை. ஆனால், நேற்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஒரு வெற்று காகிதத்தைக் காட்டி, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார்.

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

அவரிடம் இருந்தது வெற்று காகிதம்; அதுபோலவே இந்த அரசும் ஒரு வெற்று காகிதம்தான். இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும். மக்கள் திமுக வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். நானும் சி.வி. சண்முகமும் சந்தித்தது ஒரு சிறப்பு வாய்ந்த சந்திப்பாக இருக்கும்.

டிசம்பர் வரை எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்ற பேச்சு அடிபடத்தான் செய்யும்; டிசம்பரில் அதற்கான முடிவு தெரியும். கூட்டணியை மட்டும் வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள், ஆனால் கூட்டணியும் அவசியம். வரும் அக்டோபர் 12-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரையில் இருந்து 'மக்கள் சந்திப்பு பயணத்தை' தொடங்குகிறோம்.

இதன் முதல் நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொள்கிறார் என்றார்.

BJP leader Nainar Nagendran has accused the Tamil Nadu government of seeking publicity by bringing in actors.

நெல்லை மாவட்ட திமுக மாற்றியமைப்பு

திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட திமுக மாற்றியமைப்பு திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமை... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி

தனக்கு கலைமாமணி விருது அறிவித்த தமிழக அரசுக்கு நடிகர் மணிகண்டன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறிதுது அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிறப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு வழங்கிய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு ... மேலும் பார்க்க

தவெக கொடி: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தவெக கொடி தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது 6 வாரங்களில் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பர... மேலும் பார்க்க

காவல்நிலைய விசாரணையில் சிறுவன் பலி: 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை

காவல்நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பார்க்க

கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (25-09-2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல... மேலும் பார்க்க

செப். 28 திறக்கப்படுகிறது தி.நகர் மேம்பாலம்! முடிவுக்கு வரும் வாகன நெரிசல்

சென்னை மாநகராட்சியால் தெற்க உஸ்மான் சாலையை சிஐடி நகர் முதன்மை சாலையுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலம், செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவிருக்கிறது.ரூ.164.92 கோடியில் ... மேலும் பார்க்க