செய்திகள் :

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை மற்றும் தமிழக டிஜிபி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பதிவாளரின் அலுவலக மின்னஞ்சலுக்கு இன்று காலை மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடனடியாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்கள் மற்றும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து, நீதிமன்ற வளாகம், அரங்குகள், நீதிபதிகள் குடியிருப்புகளின் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஒரு மணிநேரம் நடத்திய சோதனையில் புரளி எனத் தெரியவந்தது.

இதேபோல், சென்னை காவல்துறை தலைவர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் மீட்கப்படவில்லை.

முன்னதாக, தமிழக ஆளுநர் மாளிகை, நடிகர் எஸ்.வி. சேகர் வீடு, வங்கிகளுக்கு வியாழக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Bomb threat to Madras High Court Madurai branch and DGP office

இதையும் படிக்க : வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!

செப். 28 திறக்கப்படுகிறது தி.நகர் மேம்பாலம்! முடிவுக்கு வரும் வாகன நெரிசல்

சென்னை மாநகராட்சியால் தெற்க உஸ்மான் சாலையை சிஐடி நகர் முதன்மை சாலையுடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் மேம்பாலம், செப்டம்பர் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவிருக்கிறது.ரூ.164.92 கோடியில் ... மேலும் பார்க்க

என்னைப் போல பேசுவதாக ஆப்பிரிக்க அதிபருக்கு பாராட்டு: சீமான்

சென்னையில் நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீ... மேலும் பார்க்க

கோவையில் லாரி மோதி தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் பானுமதி பலி!

கோவையில், ஈச்சர் வாகனம் மோதியதில் தெற்கு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி சம்பவ இடத்திலேயே பலியானார்.கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணி புரிந்து வந்த பானுமதி (52) இன்று காலை காமரா... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமார் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகிய இருவரும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு கூடுதல் நீதிபதிகளான என்.செ... மேலும் பார்க்க

தமிழ் மொழி திறனறித் தோ்வு: தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வுத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தோ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை கோயில் கட்டுமான பணிகள்: அக். 5-இல் நீதிபதிகள் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலின் உள்புறமும், வெளிப்புறத்தில் எவ்விதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கோயிலில் நடைப... மேலும் பார்க்க