செய்திகள் :

இளைஞரின் வயிற்றில் 29 கரண்டிகள், 19 டூத் பிரஷ்கள்: மருத்துவகள் அதிர்ச்சி!

post image

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றிலிருந்து 29 ஸ்டீல் ஸ்பூன், 19 டூத் பிரஷ்களை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தில் இந்த வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹாப்பூரில் வசித்துவருபவர் 35 வயதான சச்சின். போதைப்பொருளுக்கு அடிமையான இவர் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். அங்கு அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர்கள் பரிசோதித்தனர். அவரது வயிற்றை ஸ்கேன் செய்தபோது மருத்துவர்கள் அதிர்ந்துபோனார்கள்.

அவரது வயிற்றில் இரண்டு பேனாக்கள், 29 ஸ்டீல் ஸ்பூன்கள், 19 பல் துலக்கும் பிரஷ்கள் இருப்பது கண்டறிந்தனர். இதையடுத்து மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அகற்ற முயற்சித்தனர். ஆனால் வயிற்றில் அதிகளவிலான பொருள்கள் இருந்ததால் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அவற்றை வெளியேற்றினர்.

இதுதொடர்பாக சச்சினிடம் மருத்துவர்கள் விசாரித்தனர். மறுவாழ்வு மையத்தில், தினமும் அவருக்குச் சிறிதளவு உணவு, கொஞ்சம் காய்கறி, ஒரு சில சப்பாத்திகள் மட்டும் வழங்கப்படுகிறது. அவரது வீட்டிலிருந்து கொடுத்து அனுப்பும் எந்தவித உணவும் அவருக்கு போய் சேருவதில்லை. சில நேரங்களில் ஒரு பிஸ்கட் மட்டுமே வழங்கப்படுகிறது.

பசி தாளாமல் கோபமடைந்த அந்த இளைஞர், கரண்டி மற்றும் பிரஷ்களைத் திருடி அதைக் குளியலறைக்குக் கொண்டுசென்று, அவற்றைத் துண்டுகளாக உடைத்து வாயில் வைத்து தொண்டையில் திணிப்பாராம், சில சமயங்களில் தண்ணீர் ஊற்றி விழுங்குவாராம்.

பெரும்பாலும் உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இதுபோன்று ஏற்படுவதுண்டு என்று சச்சினுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட மருத்துவர் டாக்டர் ஷியாம் குமார் கூறினார்.

At a de-addiction centre in Uttar Pradesh's Ghaziabad, an angry patient would steal spoons from a pile of utensils and push them down his throat.

இதையும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

பிகாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: பிரதமர் தொடங்கி வைத்தார்!

பிகாரில் மகளிர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தில்லியிலிருந்து இன்று தொடங்கி வைத்தார். பிகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை... மேலும் பார்க்க

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. கிழக்கு நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க

லடாக் வன்முறை: ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது!

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, கல்வியாளர் மற்றும் பருவநிலை ஆர்வலரான சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, மாநில அந்... மேலும் பார்க்க

மிக்-21 டூ விண்வெளி..! போர் விமான அனுபவத்தை நினைவுகூர்ந்த சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி குழுவின் தலைவர் சுபான்ஷு சுக்லா, விமானப்படையின் மிக்-21 போர் விமான பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்திய விமானப் படையில் 60 ஆண்டுகளுக்கு மே... மேலும் பார்க்க

சல்மான் ருஷ்டியின் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

ஆங்கில எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ‘தி சட்டானிக் வெர்சஸ்’ எனும் புத்தகத்தைத் தடை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகங்களில் மிகவும் பிரபலமான... மேலும் பார்க்க

மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டு பெய்த பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க அந்த மாநில அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக எ... மேலும் பார்க்க